என் மலர்
நீங்கள் தேடியது "குருவாயூர் கிருஷ்ணன் கோவில்"
- ரூ.9.1 லட்சம் கோடி சொத்துடன் உலகின் 17வது பணக்காரராக உள்ளார். .
- முன்னதாக இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முகேஷ் அம்பானி வழிபாடு செய்தார்.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி சுமார் ரூ.9.1 லட்சம் கோடி சொத்துடன் உலகின் 17வது பணக்காரராக உள்ளார். ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
இந்நிலையில், இன்று குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் வழிபாடு செய்த முகேஷ் அம்பானி, கோவில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட உள்ள மருத்துவமனைக்காக 15 கோடி ரூபாய்க்கான காசோலையை நன்கொடையாக வழங்கினார்.
தேவஸ்தான தலைவர் வி.கே. விஜயன் அதனை பெற்றுக்கொண்டார். முன்னதாக இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முகேஷ் அம்பானி வழிபாடு செய்த நிலையில் குருவாயூர் கோவிலில் வழிபாடு நடத்தி உள்ளார்.
- குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் 6 மாதங்களுக்கு ஒருமுறை தலைமை அர்ச்சகர் தேர்வு.
- அக்டோபர் 1-ந்தேதி பதவியேற்கிறார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் 6 மாதங்களுக்கு ஒருமுறை தலைமை அர்ச்சகர் (மேல்சாந்தி) தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி அக்டோபர் மாதம் முதல் செயல்படும் புதிய தலைமை அர்ச்சகர் தேர்வு கோவிலில் நடந்தது.
தற்போதைய மேல்சாந்தி சிவகரன் நம்பூதிரி, கோவில் அருகே உள்ள நமஸ்கார மண்டபத்தில் சீட்டு போட்டு புதிய மேல் சாந்தியை தேர்வு செய்தார். அதன்படி பாலக்காடு அருகே உள்ள தெக்கே வாவனூரைச் சேர்ந்த ஸ்ரீநாத் நம்பூதிரி புதிய மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார். அவர் அக்டோபர் 1-ந்தேதி பதவியேற்கிறார்.






