என் மலர்tooltip icon

    இந்தியா

    குருவாயூர் கோவிலுக்கு  ரூ.15 கோடி நன்கொடை வழங்கிய முகேஷ் அம்பானி
    X

    குருவாயூர் கோவிலுக்கு ரூ.15 கோடி நன்கொடை வழங்கிய முகேஷ் அம்பானி

    • ரூ.9.1 லட்சம் கோடி சொத்துடன் உலகின் 17வது பணக்காரராக உள்ளார். .
    • முன்னதாக இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முகேஷ் அம்பானி வழிபாடு செய்தார்.

    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி சுமார் ரூ.9.1 லட்சம் கோடி சொத்துடன் உலகின் 17வது பணக்காரராக உள்ளார். ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

    இந்நிலையில், இன்று குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் வழிபாடு செய்த முகேஷ் அம்பானி, கோவில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட உள்ள மருத்துவமனைக்காக 15 கோடி ரூபாய்க்கான காசோலையை நன்கொடையாக வழங்கினார்.

    தேவஸ்தான தலைவர் வி.கே. விஜயன் அதனை பெற்றுக்கொண்டார். முன்னதாக இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முகேஷ் அம்பானி வழிபாடு செய்த நிலையில் குருவாயூர் கோவிலில் வழிபாடு நடத்தி உள்ளார்.

    Next Story
    ×