என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவன் வழிபாடு"

    • பவள லிங்கத்தை வழிபட்டால் நோய்தீரும். நட்பு பெருகும்.
    • கல்லினால் ஆன லிங்கத்தை வழிபட்டால் ஆற்றல் கூடும்.

    சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட தலங்கள், எட்டு இருக்கின்றன. அவற்றை 'அட்ட வீரட்ட தலங்கள்' என்கிறோம். இவற்றிற்கு யோக பலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். எதையும் துணிந்து செய்யும் ஆற்றல் வரும்.

    தைரியம் வழங்கும் தலங்கள்

    1. திருக்கடையூர் - எமதர்மனை காலால் உதைத்தது

    2. திருக்கண்டியூர் - பிரம்மனின் தலையைக் கொய்தது

    3. திருவதிகை - திரிபுரத்தை எரித்தது

    4. திருவழுவூர் -யானையின் தோலை உரித்தது

    5. திருப்பறியலூர் - தட்சனை சம்ஹாரம் செய்தது

    6. திருக்கோவிலூர் - அந்தகாசுரனை வதம் செய்தது

    7. திருக்குறுக்கை - மன்மதனை எரித்தது

    8. திருவிற்குடி -ஜலந்தராசுரனை வதம் செய்தது

    ஏழுவகை சிவலிங்கங்கள்

    ஏழேழு பிறவிக்கும் நற்பலன்கள் கிடைக்க ஏழு வகை சிவலிங்கங்கள் உண்டு. அவைகளை முறைப்படி வழிபட்டால் அவற்றிற்குரிய நன்மை வந்தடையும்.

    சுயம்புருவம் - தானாக உண்டானது

    தேவியகம் - அம்பிகை வழிபட்டது

    தைவிகம் - தேவர்கள் வழிபட்டது

    மானுஷம் - மனிதர்கள் வழிபட்டது

    ராட்சஷம் - அசுரர்கள் வழிபட்டது

    ஆரிஷம் - ரிஷிகள் வழிபட்டது

    பாணம்- பாணாசுரன் பூஜித்தது

    சிவலிங்க பூஜையும், பலனும்...

    ரத்தினத்தால் ஆன சிவலிங்கத்தை பூஜை செய்து வழிபட்டால் லட்சுமி கடாட்சம் கிட்டும். செல்வம் பெருகும். உலோகத்தால் ஆன சிவலிங்கத்தை வழிபட்டால் துன்பம் நீங்கும், எதிர்ப்புகள் அகலும்.

    பவள லிங்கத்தை வழிபட்டால் நோய்தீரும். நட்பு பெருகும். கல்லினால் ஆன லிங்கத்தை வழிபட்டால் ஆற்றல் கூடும். கல்வி, கலைகளில் தேர்ச்சி கிட்டும். அரும்பெரும் சக்தி உண்டாகும்.

    இழந்த செல்வங்களை மீண்டும் பெற வழிபட வேண்டிய சிவதலங்கள்:

    திருவெண்காடு, திருவையாறு, திருவிடைமருதூர், திருச்சாய்க்காடு, ஸ்ரீவாஞ்சியம், மயிலாடுதுறை. இந்த தலங்களுக்கு யோக பலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் இழந்த பதவி, இழந்த செல்வங்களை மீண்டும் பெறலாம்.

    • யோகாசன பயிற்சி செய்தல்.
    • அடிக்கடி மந்திரம் கூறி பகவானை நினைத்தல்.

    இந்து மக்களின் 7 கடமைகள்

    1.தினம் காலையில் மந்திரம் கூறி தியானப்பயிற்சி செய்தல் பிறகு அன்றாட வேலைகளை திட்டமிடுதல்.

    2. யோகாசன பயிற்சி செய்தல்.

    3. காரம், புளிப்பு, எண்ணை குறைவாக உள்ள உணவை அளவாக உட்கொள்ளுதல்.

    4. ஓய்வு நேரங்களில் சிறிது ஆன்மீக நூல் படித்தல் அல்லது ஆன்மீக சொற்பொழிவு கேட்டல்.

    5. அடிக்கடி மந்திரம் கூறி பகவானை நினைத்தல்.

    6. தன் குற்றம் கண்டறிந்து பகவானிடம் மன்னிப்பு கேட்டு ஆன்ம உயர்வு பெறுதல்.

    7. சமயத் தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு புண்ணியம் சேர்த்தல்

    இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் இந்த உலக வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள். மறுமைக்கான பாதை தெளிவாகும்.

    • பெண்கள் பெற்றோர் மற்றும் ஆன்றோரை மதித்தல்,
    • அனைத்து உயிர்களிடத்தும் அன்பை வெளிப்படுத்துதல்.

    சிவதர்மம் என்பது யாது?

    1.கொல்லாமை,

    2.பழிக்கு அஞ்சுதல்,

    3.பொறுமை,

    4.நலம்புரிதல்,

    5.உள்ளன்புடன் இருத்தல்,

    6.இயன்றவரை கொடைச் செயல்கள் புரிதல்,

    7.சிவனாகிய சச்சிதானந்தத்தை அர்ச்சனை செய்தல்,

    8.புண்ணிய காரியங்களை செய்தல்,

    9.சிவபெருமானை மானசீகமாக நினைத்து பூஜித்தல்,

    10. அனைத்து உயிர்களிடத்தும் அன்பை வெளிப்படுத்துதல்,

    11. மனசாட்சிக்கு மீறிய செயல்களை செய்யாதிருத்தல்,

    12. தீய வார்த்தைகளை உபயோகிக்காதிருத்தல்,

    13. பெண்கள் பெற்றோர் மற்றும் ஆன்றோரை மதித்தல்,

    14. எந்த உயிரையும் துன்புறுத்தாதிருத்தல்,

    15. நல்வழி நற் சிந்தனையில் செல்லுதல்

    ×