என் மலர்
நீங்கள் தேடியது "மூப்பனார்"
- கடந்த 4-ந்தேதி அந்த இடத்தில் காங்கிரஸ் மாநாட்டை மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நடத்தினார்.
- அந்த இடத்தை காங்கிரசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள்.
சென்னை:
சென்னை தேனாம்பேட்டையில் காங்கிரசுக்கு சொந்தமான 200 கிரவுண்டு இடம் உள்ளது. அதில் 20 கிரவுண்டு இடத்தில் காமராஜர் அரங்கம் அமைந்து உள்ளது.
ஒரு பக்கத்தில் மறைந்த ஜி.கே. மூப்பனார் நினைவிடம் உள்ளது. அந்த இடத்தில் தான் மூப்பனார் உடல் தகனம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் அவரது நினைவுநாள் நிகழ்ச்சிக்கு ஏராளமான அரசியல் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் வந்து மரியாதை செலுத்துவது வழக்கம்.
சுமார் 160 கிரவுண்டு நிலம் காலியாக கிடந்தது. அந்த இடம் தனியாருக்கு கட்டிடம் கட்ட ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், அது காலாவதியாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி அந்த இடத்தில் காங்கிரஸ் மாநாட்டை மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நடத்தினார். மேலும் தனியார் பயன்படுத்திய பாதையை செங்கல் கட்டி காங்கிரசார் அடைத்து விட்டார்கள். தனியாரை உள்ளே நுழையவும் அனுமதிக்கவில்லை. அந்த இடத்தை காங்கிரசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள்.
காங்கிரஸ் கூட்டத்துக்கு வந்திருந்த அகில இந்திய காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு குழு தலைவர் தமிழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது 18 கிரவுண்ட் இடத்தில் அமைந்து உள்ள மூப்பனார் நினைவிடத்தை அகற்றி விட்டு காங்கிரஸ் சொத்துடன் இணைக்க வேண்டும் என்று சிலர் கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் மூப்பனார் நினைவிடமும் அகற்றப்படலாம் என்ற தகவல் பரவியது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெ ருந்தகையை தொடர்பு கொண்டு கேட்டபோது கூறியதாவது:-
அந்த மாதிரி எந்த திட்டமும் இல்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு வதந்தி பரப்புகிறார்கள் என்றார்.
- தி.மு.க. அரசு தெருக்கள் தோறும் டாஸ்மாக் கடைகளை திறந்து அவர்களை பாழ்படுத்துகிறது.
- மூப்பனாரின் பிறந்த நாளையொட்டி மூப்பனார் மற்றும் காமராஜர் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டது.
சென்னை:
மறைந்த ஜி.கே.மூப்பனாரின் 92-வது பிறந்த நாள் விழா சென்னை சேப்பாக்கத் தில் இன்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார்.
மூப்பனாரின் பிறந்த நாளையொட்டி மூப்பனார் மற்றும் காமராஜர் பெயரில் விருதுகள் வழங்கப்படும் இந்த ஆண்டுக்கான மூப்பனார் விருதுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. மாறன் என்ற வேணுகோபாலும், காமராஜர் விருதுக்கு பாலம் கல்யாணசுந்தரமும் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.
இருவருக்கும் ஜி.கே.வாசன் விருதுகளை வழங்கி பாராட்டி பேசினார். விழாவையொட்டி நடந்த கருத்தரங்கில் விடியல் சேகர், யுவராஜா, ராஜன் எம்.பி.நாதன், முனைவர் பாட்சா ஆகியோர் பேசினார்கள்.
விழாவில் மாநில நிர்வாகிகள் ஜவகர்பாபு, சக்திவடிவேல், திருவேங்கடம், கே.ஆர்.டி.ரமேஷ், தி.நகர் கோதண்டன், கே.ஆர்.டி.ரமேஷ், மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், பிஜு சாக்கோ, அருண்குமார், பி.எம்.பாலா, கோவிந்தசாமி, முனைவர் பாட்சா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஜி.கே.வாசன் பேசும்போது, மாணவர்களின் நலன்களை பாதுகாப்போம் என்று சொல்லும் தி.மு.க. அரசு தெருக்கள் தோறும் டாஸ்மாக் கடைகளை திறந்து அவர்களை பாழ்படுத்துகிறது.
நீட் தேர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் சவால் விடும் வகையில் தமிழக மாணவர்கள் முன்னேறி வரும் நிலையில் அவர்களை ஊக்கப்படுத்துவதற்கு பதிலாக நீட்டை நிறுத்துவோம் என்று பொய்யான வாக்குறுதிகளை கூறி அவர்களை தவறான பாதைக்கு வழி நடத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.






