என் மலர்
நீங்கள் தேடியது "அம்ரித் பாரத்"
- அம்ரித் பாரத் ரெயில்களில் 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் உள்ளன.
- ஹவுரா- கவுகாத்தி இடையே வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரெயில் சேவையும் தொடக்கம்.
வந்தே பாரத் அதிவேக சொகுசு ரெயில் பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ரெயில் முற்றிலும் ஏ.சி. வசதி கொண்டதால் கட்டணம் அதிக அளவில் உள்ளது.
அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் அம்ரித் பாரத் ரெயில் சேவை தமிழகம், மேற்கு வங்காளம் மாநிலங்களை இணைக்கும் வகையில் தொடங்கப்படுகிறது.
இதன் தொடக்க விழா மேற்கு வங்காளம் மாநிலம் மால்டா டவுன் ரெயில் நிலையத்தில் இன்று காலை நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி புதிய அம்ரித் பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 3 ரெயில் சேவைகளும், மேற்கு வங்காளம், கர்நாடகா மாநிலத்தில் 3 ரெயில் சேவைகளும் இதில் அடங்கும்.
நாகர்கோவில்-நியூ ஜல் பைகுரி, திருச்சி-நியூ ஜல் பைகுரி, தாம்பரம்-சந்திர காசி ஆகிய 3 அம்ரித் ரெயில் சேவை தமிழகம்- மேற்குவங்க மாநிலம் இடையே இயக்கப்படுகிறது.
இதேபோல அலிபு துவார்-பெங்களூரு, பாலூர் காட்- பெங்களூரு, ராதிகாபூர்-பெங்களூரு ஆகிய 3 அம்ரித் ரெயில் சேவையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இது தவிர ஹவுரா- கவுகாத்தி இடையே வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரெயில் சேவையும் அவர் தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்- நியூ ஜல் பைகுரி அம்ரித் ரெயில் இன்று மேற்கு வங்காளம் ரங்கபாணி நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது.
இந்த ரெயில் முற்றிலும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி மற்றும் இருக்கை வசதி கொண்டதாகும். இதில் ஏ.சி. பெட்டிகள் கிடையாது.
இந்த ரெயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலைப் பேட்டை, பழனி, திண்டுக் கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் சென்றடைகிறது.
நியூ ஜல்பைகுரியில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் அம்ரித் ரெயில் ஆந்திரா வழியாக எழும்பூர் நிலையம் வருகிறது. பின்னர் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம் , மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்சி சென்றடைகிறது.
சந்திரகாசியில் இருந்து நாளை 18-ந் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படும் அம்ரித் பாரத் ரெயில் மறுநாள் இரவு 8.45 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது. இந்த ரெயில் சூலூர்பேட்டை வழியாக எழும்பூர் வந்து பின்னர் தாம்பரம் சென்ற டைகிறது.
அம்ரித் பாரத் ரெயில்களில் 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளும் 11 பொது இருக்கை பெட்டி களும், 2-இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் என மொத்தம் 21 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும் பிரதமர் மோடி பாலூர்காட்-ஹிலி இடையே புதிய ரெயில் பாதை, துப்குரி-பலகட்டா பிரிவில் 4 வழிச்சாலை, சிலி குரியில் லோகோ ஷெட் மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
- பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
- தென்காசி ரெயில் நிலையத்தின் 2-வது நுழைவாயிலை அபிவிருத்தி செய்தல், உள்ளிட்ட பணிகள் நடைபெறுகிறது.
தென்காசி:
நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 508 ரெயில் நிலையங்களை புனரமைக்கப்பட உள்ளது. இதற்காக ரெயில்வே அமைச்சகம் ரூ.24,470 கோடிக்கு மேல் ஒதுக்கியது. இந்த பணிகளுக்கு பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
தமிழகத்தில் தென்காசி உள்பட 18 ரெயில் நிலையங்களில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தென்காசி ரெயில் நிலையத்தின் அபிவிருத்தி ரூ.7.08 கோடியில் நடைபெறுகிறது. அதாவது ரெயில்
நிலையத்தின் 2-வது நுழைவாயிலை அபிவிருத்தி செய்தல், அந்த நுழை வாயிலில் புதிய நிலையக் கட்டிடத்தை நிர்மாணித்தல், அணுகு சாலைகளை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் நடைபெறுகிறது.
விழாவில் தனுஷ் குமார் எம்.பி., பழனி நாடார் எம்.எல்.ஏ., தென்காசி நகராட்சி சேர்மன் சாதிர், அமர்சேவா சங்கம் ராமகிருஷ்ணன்,
கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் ரமேஷ் பாபு, தென்காசி பா.ஜனதா மாவட்டத் தலைவர் ராஜேஷ் ராஜா, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் மருது பாண்டியன், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன், ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா மற்றும் ரெயில்வே ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழகத்துக்கு ரெயில்வே துறை சார்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
- ரெயில் பெட்டிகளும் தயாரிக்கப்பட்டு அனைத்து சோதனைகளும் நிறைவடைய குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது ஆகும்.
சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்டு வரும் அம்ரித் பாரத் 2.0 படுக்கை வசதி கொண்ட ரெயில் பெட்டிகளை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் அவர் கூறியதாவது:
நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்தை மேம்படுத்த மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்துக்கு ரெயில்வே துறை சார்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஏழை எளிய மக்களும் வந்தே பாரத் ரெயில்களில் பயணிக்கும் அனுபவத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக குறைந்த கட்டணத்தில் அம்ரித் பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், தற்போது படுக்கை வசதி கொண்ட அம்ரித் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ரெயில் பெட்டிகளும் தயாரிக்கப்பட்டு அனைத்து சோதனைகளும் நிறைவடைய குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது ஆகும்.
அந்த வகையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 அம்ரித் ரெயில்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.






