என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளஸ்-2 துணைத்தேர்வு"

    • ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 துணைத்தேர்வு 8 மையங்களில் தேர்வு நடை பெற உள்ளது.
    • துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் பிளஸ்-2 துணைத்தேர்வு வருகிற 19-ந் தேதி முதல் தொடங்கி 26-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இத்தேர்வானது ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு ரங்கம்பாளையம் கொங்கு மேல்நிலைப்பள்ளி, பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோபி பழனியம்மாள் மேல்நிலைப்பள்ளி, சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அந்தியூர் மங்களம் மேல்நிலைப்பள்ளி, கோபி வைர விழா மேல்நிலை ப்பள்ளி உள்ளிட்ட 8 மையங்களில் தேர்வு நடை பெற உள்ளது.

    இதில் 4 மையங்கள் பிளஸ் -2 தேர்வினை ஏற்கனவே எழுதி தோல்வியுற்றவர்களுக்கும், புதிதாக பிளஸ்-2 தேர்வும் தனித்தேர்வர்களுக்கு 4 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், பிளஸ்-1 துணைத்தேர்வு வரும் 27-ந் தேதி தொடங்கி ஜூலை மாதம் 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதற்கான வினாத்தாள்கள் ஈரோடு காந்திஜி சாலை அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உள்ள மையத்தில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த விடைத்தாள் மையத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த துணை த்தேர்வுக்கான ஏற்பாடுகளை அரசு தேர்வுகள் துறை மற்றும் பள்ளிக்க ல்வித்துறை செய்து வருகிறது.

    • வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது
    • அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    தமிழகம் முழுவதிலும் இன்று பிளஸ்-2 துணைத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது.

    வேலூர் மாவட்டத்தில் சத்துவாச்சாரி சாந்திநிகேதன் மெட்ரிக்பள்ளி, காட்பாடி வாணி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, டிரினிட்டி மெட்ரிக் பள்ளி, கிங்ஸ்டன் மெட்ரிக் பள்ளி, கழனிப்பாக்கம் நாமக்கல் டீச்சர்ஸ் மெட்ரிக் பள்ளி, குடியாத்தம் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி, சாய்நாதபுரம் என்.கே.எம். மேல்நிலைப்பள்ளி, அணைக்கட்டு விவேகானந்தர் மெட்ரிக் பள்ளி ஆகிய 8 மையங்களில் நடந்தது.

    இதில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வு எழுத வராதவர்கள் மற்றும் தனிதேர்வாளர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு மதியம் 1.15 மணி வரை நடந்தது.

    அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இந்த தேர்வில் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் மற்றும் அறை கண்காணிப்பு பணிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

    வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், பிளஸ்-2 துணைத் தேர்வு எந்தவித மாற்றமும் இன்றி நடந்தது.

    அதேபோல் இந்த 8 மையங்களிலும் பிளஸ்-1 துணைத் தேர்வு வருகிற 27-ந் தேது முதல் ஜூலை 5-ந் தேதி வரை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பிளஸ்-2 துணைத்தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கான சேர்க்கை நடக்கிறது.
    • காலியிடங்களின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை கல்லூரி முதல்வர் அனுராதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக் கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் பாடப்பி–ரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தற்போது பிளஸ்-2 துணைத்தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கான சேர்க்கை நடக்கிறது. இதில், மாணவர்கள் கல்லூரிக்கு நேரடியாக வந்து சேர்க்கை விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து கல்லூரியில் சேரலாம்.

    கலந்தாய்வில் பங்கேற்ப–வர்கள் மாற்றுச் சான்றிதழ் (அசல், இ.எம்.ஐ.எஸ்., எண்ணுடன்) மதிப்பெண் பட்டியல் (பத்தாம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 அசல் சான்றிதழ்கள்) சாதி சான்றிதழ் (அசல்) வருமானச் சான்றிதழ், மார்பளவு புகைப்படங்கள்-4, ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தக முதல்பக்க நகல், சேர்க்கைக் கட்டணமாக, கலைப்பிரிவுக்கு 2,100, அறிவியல் பிரிவிற்கு 2,120, கணினி அறிவியல் பிரிவிற்கு 1,220 ரூபாய் எடுத்து வரவேண்டும்.

    காலியிடங்களின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×