என் மலர்
நீங்கள் தேடியது "மாங்காடு காமாட்சி அம்மன் கோவில்"
- பல்வேறு கோவில்களில் பக்தர்களுக்கு நாள்தோறும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
- காமாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
பூந்தமல்லி:
தமிழக சட்டமன்ற மானியக் கோரிக்கையின் போது முக்கிய கேவில்களில் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து பிரசித்தி பெற்ற பல்வேறு கோவில்களில் பக்தர்களுக்கு நாள்தோறும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் மாங்காட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
இதனை அமைச்சர்கள் பி.கே.சேகர் பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி தொடங்கி வைத்தனர்.
இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் டாக்டர் சி பழனி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், மண்டல இணை ஆணையர் .குமரதுரை, துணை ஆணையர், செயல் அலுவலர் சித்ராதேவி, உதவி ஆணையர் கார்த்திகேயன், கோவில் பரம்பரை தர்மகர்த்தா டாக்டர் மணலி சீனிவாசன், குன்றத்தூர் முருகன் கோவில் செயல் அலுவலர் ஸ்ரீகன்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தெப்பத்திருவிழா மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள தெப்ப குளத்தில் நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பூந்தமல்லி:
மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் சிறப்பு வாய்ந்தது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைபூசத்தை முன்னிட்டு தெப்பத்திரு விழா 3 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான தெப்பத்திருவிழாவின் இறுதி நாளான நேற்று மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள தெப்ப குளத்தில் நடைபெற்றது.
தெப்ப திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் வெள்ளீஸ்வரர், காமாட்சி அம்மன், வைகுண்ட பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
நேற்று வள்ளி-தெய்வானை சமேதராக சுப்பிரமணிய சுவாமி தெப்பத்தில் எழுந்தருளினார். பின்னர் காமாட்சி அம்மன் தெப்பத்தில் எழுந்தருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து காமாட்சி அம்மன் அன்ன வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தெப்பத்தில் பழங்கள், மலர், வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மாங்காடு போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- மாங்காட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது.
- பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.31 லட்சத்து 66 ஆயிரத்து 363 ரொக்கம், 320 கிராம் தங்கம், 450 கிராம் வெள்ளி கிடைத்தது.
காஞ்சிபுரம்:
மாங்காட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் உள்ள உண்டியல்கள் செயல் அலுவலர் கவெனிதா, இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன் ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.
இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.31 லட்சத்து 66 ஆயிரத்து 363 ரொக்கம், 320 கிராம் தங்கம், 450 கிராம் வெள்ளி கிடைத்தது.






