என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டம்- பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தனர்
    X

    மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டம்- பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தனர்

    • பல்வேறு கோவில்களில் பக்தர்களுக்கு நாள்தோறும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
    • காமாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

    பூந்தமல்லி:

    தமிழக சட்டமன்ற மானியக் கோரிக்கையின் போது முக்கிய கேவில்களில் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பிரசித்தி பெற்ற பல்வேறு கோவில்களில் பக்தர்களுக்கு நாள்தோறும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் மாங்காட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

    இதனை அமைச்சர்கள் பி.கே.சேகர் பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி தொடங்கி வைத்தனர்.

    இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் டாக்டர் சி பழனி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், மண்டல இணை ஆணையர் .குமரதுரை, துணை ஆணையர், செயல் அலுவலர் சித்ராதேவி, உதவி ஆணையர் கார்த்திகேயன், கோவில் பரம்பரை தர்மகர்த்தா டாக்டர் மணலி சீனிவாசன், குன்றத்தூர் முருகன் கோவில் செயல் அலுவலர் ஸ்ரீகன்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×