என் மலர்
நீங்கள் தேடியது "வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால்"
- டி.என்.பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் விடிய, விடிய பெய்த தொடர் கனமழை காரணமாக கொன்னக் கொடிகால் குடியிருப்பு பகுதியில் வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது.
- தண்ணீர் வடியாததால் வீட்டிற்குள் மழைநீர் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி, கவுண்டம் பாளைம் கிராமம், கொன்னக்கொடி கால் என்ற பகுதியில் சுமார் 70 குடும்பங்களில் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
கடந்த 3 நாட்களாக டி.என்.பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் விடிய, விடிய பெய்த தொடர் கனமழை காரணமாக கொன்னக் கொடிகால் குடியிருப்பு பகுதியில் வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது.
இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் இன்று வீட்டை விட்டு வெளியே மேடான சாலையோர பகுதிக்கு வந்தனர்.
தண்ணீர் வடியாததால் வீட்டிற்குள் மழைநீர் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
மழைநீர் வெள்ளத்தால் சில ஆடுகள் இறந்து விட்டதாகவும், வீடுகளுக்குள் பாம்பு போன்ற விஷ சந்துக்கள் வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மேலும், வீடுகளுக்குள் புகுந்து மழைநீர் வெள்ளத்தை வெளியேற்ற சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் விழுந்துள்ளன.
- வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், திட்டக்குடி, சிதம்பரம் காட்டுமன்னார்கோவில், வேப்பூர் மற்றும் மாவட்டம் முழுவதும் பெய்துள்ளது.

கனமழை காரணமாக கடலூர், வடலூர், காட்டுக் கூடலூர், நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் விழுந்துள்ளன.

கடலூர் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி உள்ளது. முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக் குள்ளாகி உள்ளனர்.






