என் மலர்
நீங்கள் தேடியது "4 வழிச் சாலை"
- 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
- 4 வழிச் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருபுவனை:
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமங்களில் தனியார் நிறுவனம் மூலம் 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தொழிலாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் பலமுறை அந்த நிறுவனத்திடம் சம்பள பாக்கி கேட்டு முறையிட்டனர். ஆனாலும் சம்பளம் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் துப்புரவு தொழிலாளர்கள் உடனடியாக சம்பளம் வழங்கக் கோரியும் இ.எஸ்.ஐ., பி.எப். பிடிப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரி திருபுவனை 4 வழி சாலையில் குப்பை வண்டிகள், குப்பை கூடைகளுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த திருபுவனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை துப்புரவு தொழிலாளர்கள் ஏற்க வில்லை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து திருபுவனை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கோபிகா சாலை மறியலில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் குப்பை வாரும் பணியை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவன பொதுமேலாளர் நரேன்னிடம் தொலைபேசியில் பேசி 4 மாத சம்பள பாக்கியை உடனடியாக ஊழிகளுக்கு வழங்க அவர் கேட்டுக்கொண்டார்.
அதற்கு தனியார் குப்பை வாரும் நிறுவன பொதுமேலாளர் சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். இதனை ஏற்றுக் துப்புரவு தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தினால் புதுவை-விழுப்புரம் 4 வழிச் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- வாகனங்கள் சென்று வர கட்டணம் நிர்ணயம்
- இந்த டோல்கேட் வழியாக செல்லும் வாகனங்களுக்கான கட்டணமும் வெளியிடப்பட்டு உள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 4 வழிச் சாலை திட்ட பணிக்காக காரோடு முதல் வில்லுக்குறி வரை 27 கி.மீட்டர் தூரம், வில்லுக்குறி முதல் நாகர்கோவில்அப்டா மார்க்கெட் வரை 14 கி.மீ. தூரம், அப்டா மார்க்கெட் முதல் காவல்கிணறு பெருங்குடி வரை 16 கி.மீட்டர் தூரம், அப்டா மார்க்கெட் முதல் முருகன்குன்றம் வரையில் 12 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டு 2016 ஜனவரியில் பணிகள் தொடங்கப்பட்டன. இதில் அப்டா மார்க்கெட் முதல் காவல்கிணறு வரையிலான பணிகளை 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் பணிகள் முடிய மேலும் 4 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இதற்கிடையில் திருப்பதிசாரம் அருகே டோல்கேட் அமைக்கும் பணி தொடங்கி நிறைவு பெற்றுள்ளது. இந்த டோல்கேட் வருகிற 24-ந் தேதி முதல் செயல்பட தொடங்கும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட அமலாக்க பிரிவு சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இந்த டோல்கேட் வழியாக செல்லும் வாகனங்களுக்கான கட்டணமும் வெளியிடப்பட்டு உள்ளது.
முன்பு 47 பி என இருந்த நாகர்கோவில்-காவல்கிணறு தேசிய நெடுஞ்சாலை, திருத்தப்பட்டு இனி தேசிய நெடுஞ்சாலை எண் 944 என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.






