என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்குவாரிகள் தொழிலாளர்"

    • சிவகங்கை மாவட்டத்தில் கல்குவாரி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
    • காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.எஸ்.கோட்டையை அடுத்த மல்லாங்கோட்டை கிராமத்தில் மேகா மெட்டல் குவாரி என்ற பெயரில் கல்குவாரி ஒன்று கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகைளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் தினக்கூலி தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று காலையில் வழக்கம் போல் பணிக்கு வந்த தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் பாறைகளை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மண் சரிந்ததில் குவாரியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர். இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

    உயிரிழந்த 5 பேர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கி முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-,

    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், மல்லாக்கோட்டை கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான கல் குவாரியில் இன்று (20.5.2025) காலை எதிர்பாராதவிதமாக பாறை மற்றும் மண் சரிந்து விழுந்த விபத்தில் கல் குவாரியில் பணி செய்துகொண்டிருந்த முருகானந்தம், ஆறுமுகம், கணேசன், ஆண்டிச்சாமி மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேரந்த ஹர்ஷித் ஆகிய ஐந்து நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்களை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி மீட்பு நடவடிக்கைளை மேற்கொள்ளவும் அறிவுத்தினேன்.

    மேலும், இவ்விபத்தில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மைக்கேல் என்பவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

    • கல்குவாரிகளில் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்தி வைக்க சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம்.
    • கல்குவாரி தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்.

    பல்லடம் :

    பல்லடம் கல்குவாரி தொழிலுக்கு இடையூறு செய்வதை கண்டித்து இன்று முதல் காரணம்பேட்டையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என திருப்பூர் மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் பாலசுப்பிரமணியம் கூறுகையில்:- திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் என்ற போர்வையில் சிலர் கல்குவாரி தொழில்களை நலிவடைய செய்யும் வகையில் இயங்கி வருபவர்களை கண்டித்து இன்று மற்றும் நாளை 13 ந்தேதி (செவ்வாய்க்கிழமை ) ஆகிய 2 நாட்களும் திருப்பூர் மாவட்ட சங்கத்தின் சார்பாக கல்குவாரிகளில் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்தி வைக்க சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம்.

    மேலும் இன்று சங்க உறுப்பினர்களின் லாரி, டிப்பர் வாகனங்களை காரணம்பேட்டையில் சங்கத்தின் மூலம் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் கொண்டு வந்து வரிசையாக நிறுத்தி வைக்கவும், கல்குவாரி தொழிலாளர்கள் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து கல்குவாரி தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்.அதன் பின்பு நாளை மாநில சங்கத்தலைவர் கே.சின்னச்சாமி தலைமையில் காரணம்பேட்டையில் சங்கத்தின் மூலம் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் அனைத்து உறுப்பினர்களும், தொழிலாளர்களும் குடும்பத்துடன் பங்கேற்கும் உண்ணாவிரதம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. அதில் சங்க உறுப்பினர்கள், கல்குவாரி தொழிலாளர்கள், விவசாயிகள், கட்டட கட்டுமான தொழிலாளர்கள், தொழில் துறையினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு ஆதரவு தர வேண்டுகிறோம். சங்கத்தின் மூலம் 2 நாட்கள் நடைபெற உள்ள போராட்டத்தில் அனைத்து விவசாயிகள் சங்க அமைப்புகளும், கல்குவாரி தொழில் சார்ந்த அனைத்து அமைப்புகளும், ஆர்.எம்.சி. உரிமையாளர்களும், மற்றும் அனைத்து மாவட்டத்தில் உள்ள கல் குவாரி மற்றும் கிரசர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர் .இந்த மாபெரும் உண்ணாவிரத போராட்டம் வெற்றி அடைய அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×