என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்கில் போர் வெற்றி தினம்"

    • போர் நினைவு சின்னத்தில் தலைவர்கள் மற்றும் ராணுவ தளபதிகள் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.
    • கார்கிலில் தாய்நாட்டை பாதுகாத்து, தங்கள் உயிரை தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

    கடந்த 1999-ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் இடையே கார்கில் போர் ஏற்பட்டது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியை ஆண்டுதோறும் ஜூலை 26-ந்தேதி கார்கில் போர் வெற்றி தினமாக இந்தியா கடைபிடித்து வருகிறது. இன்றைய தினத்தில் போர் நினைவு சின்னத்தில் தலைவர்கள் மற்றும் ராணுவ தளபதிகள் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.

    அதன்படி ஜூலை 26-ந்தேதியான இன்று கார்கில் வெற்றி கொண்டாட்டம் கொண்டாடப்படுகிறது.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    கார்கிலில் தாய்நாட்டை பாதுகாத்து, தங்கள் உயிரை தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். ராணுவ வீரர்களின் வீரமும் தியாகமும் ஒருபோதும் மறக்கப்படாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 1999ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது.
    • ஜூலை 26ஆம் நாள் கார்கில் வெற்றி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    1999ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் இடையே கார்கில் போர் ஏற்பட்டது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியை ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் போர் வெற்றி தினமாக இந்தியா கடைபிடித்து வருகிறது. இன்றைய தினத்தில் போர் நினைவு சின்னத்தில் தலைவர்கள் மற்றும் ராணுவ தளபதிகள் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.

    அதன்படி ஜூலை 26ஆம் தேதியான இன்று கார்கில் வெற்றி கொண்டாட்டம் கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் "நாட்டின் பெருமையைப் பாதுகாப்பதற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களின் ஈடு இணையற்ற துணிச்சலையும், வீரத்தையும் இந்த நிகழ்வு நினைவுபடுத்துகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் "தேசிய போர் நினைவுச் சின்னத்தில் கார்கில் போரில் உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது இந்திய பாதுகாப்புப்படை தலைமை தளபதி மற்றும் முப்படைத் தளபதிகள் உடனிருந்தனர்.

    • நினைவு பரிசு வழங்கி மரியாதை செய்யப்பட்டது
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் கார்கில் போர் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது.

    வாணியம்பாடி காந்திநகர் நகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் வாணியம்பாடி மிட்டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பில் 23வது ஆண்டு கார்கில் போர் வெற்றி தின விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்தும், நினைவு பரிசு வழங்கி மரியாதை செய்யப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், வாணியம்பாடி மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் ஆர்.வி குமார் தலைமையிலான சங்க நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

    ×