என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதனை விளக்க பொதுக்கூட்டம்"

    • கிருஷ்ணகிரி,மே.6- இந்த பொதுக்கூட்ட ங்களுக்கு சம்பந்தப்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.
    • கூட்டங்கள் சிறப்பாக நடத்துவதற்கு ஏதுவாக அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும்

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

    இது தொடர்பாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. தலைவரும், தமிழக முதல் -அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, திராவிட மாடல் ஆட்சியின் 2 ஆண்டு கால சாதனைகளை விளக்கி கிருஷ்கிரி மாவட்டத்தில் பொதுக்கூட்டங்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.

    அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஊத்தங்கரை தெற்கு ஒன்றியம் கல்லாவி பஸ் நிலையத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் நான் பேசுகிறேன்.

    கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றியம் பெத்ததாளப்பள்ளி பாரத கோவிலில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் குடியாத்தம் குமரனும், மத்தூர் வடக்கு ஒன்றியத்தில் குன்னத்தூரில் மாலை 5.30 மணிக்கு தலைமை கழக பேச்சாளர் கருணாநிதியும், காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றியம் அகரம் கூட்டு ரோட்டில் மாலை 6 மணிககு தலைமை கழக பேச்சாளர் வயலூர் கிருஷ்ணமூர்த்தியும் பேசுகிறார்கள்.

    நாளை மறுநாள் (திங்கட் கிழமை) காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றியம் பையூர் பெரியார் சிலை அருகில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் நான் பேசுகிறேன்.

    மத்தூர் தெற்கு ஒன்றியம் சாமல்பட்டடியில் மாலை 5.30 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சூர்யா வெற்றி கொண்டானும், ஊத்தங்கரை மத்திய ஒன்றியம் மிட்டப்பள்ளியில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் தமிழ் கொண்டான் பேசுகிறார்.

    தொடர்ந்து 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பர்கூர் தெற்கு ஒன்றியம் ஜெகதேவியில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் தமிழக துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பேசுகிறார். அன்றைய தினம் போச்சம்பள்ளி பஸ் நிலையத்தில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியும், கிருஷ்ணகிரி நகரம் 5 ரோடு ரவுண்டானா அருகில் நடைபெறும் கூட்டத்தில் நானும், ஊத்தங்கரை வடக்கு ஒன்றியம் மகனூர் பட்டியில் நடக்கும் கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சுபா சந்திரசேகரும், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியம் குருபரப்பள்ளி கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் பிரம்மபுரம் பழனியும், பர்கூர் வடக்கு ஒன்றியம் ஒப்பதவாடி கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் தா.பழூர் இளஞ்செழியனும் பேசுகிறார்கள்.

    இந்த பொதுக்கூட்ட ங்களுக்கு சம்பந்தப்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திட வேண்டும். கூட்டங்கள் சிறப்பாக நடத்துவதற்கு ஏதுவாக அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

    அதே போல நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்களுக்கு மாநில, மாவட்ட நகர, ஒன்றிய, பேரூர் கழக கிளை நிர்வாகிகள், பி.எல்.ஏ.2 வாக்குச்சாவடி முகவர்கள் உறுதுணையாக இருக்க கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தி.மு.க சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திப்பம்பட்டி கூட்ரோட்டில் நடைபெற்றது.
    • தலைமை கழக பேச்சாளர் தானூர் சிவக்கொழுந்து கலந்து கொண்டு திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கிப் பேசினார்.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் மேற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திப்பம்பட்டி கூட்ரோட்டில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு மொரப்பூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினவேல் தலைமை வகித்தார்.பன்னிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் வெற்றி செல்வன் துரை வரவேற்று பேசினார்.

    இக்கூட்டத்திற்கு கம்பைநல்லூர் பேரூராட்சித் தலைவர் வடமலை முருகன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் மாசிலாமணி, மொரப்பூர் மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் பன்னீர்செல்வம், கம்பைநல்லூர் நகர செயலாளர் மோகன், பன்னிக் குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராதா துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் தானூர் சிவக்கொழுந்து கலந்து கொண்டு திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கிப் பேசினார்.

    கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் சென்னகிருஷ்ணன், மொரப்பூர் மேற்கு ஒன்றிய செயலாளர் செங்கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் வாசுதேவன், ஒன்றிய குழு உறுப்பினர் பழனியம்மாள் ரவி, இருமத்தூர் ஓய்வு பெற்ற ஆசிரியர் சந்திரசேகரன், அருண், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பழனியம்மாள் கிருஷ்ணன், கொன்றம்பட்டி சிவக்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பேசும் தெய்வம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பத்மினி துரைசாமி, நாகராஜ், மாதையன், மனோகரன், ஈச்சம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வெள்ளையன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ராயப்பன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராசி தமிழ் நன்றி கூறினார்.

    • இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகிறார்.
    • சுமார் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் கரையான் புதூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தாமரை மாநாடு என்ற பெயரில் நாளை 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை ) மாலை 4மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகிறார்.இதையொட்டி அங்கு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    மாநில பொதுச்செயலாளர் ஏ. பி. முருகானந்தம், திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் செந்தில்வேல், மாவட்ட பொதுச்செயலாளர் கே.சி.எம்.சீனிவாசன், ஆகியோர் கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

    இது குறித்து பா.ஜ.க. நிர்வாகிகள் கூறியதாவது: - தமிழகம் முழுவதும் பிரதமர் மோடி அரசின் சாதனைகளை விளக்கி மாநிலத் தலைவர் அண்ணாமலை , சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் நாளை பல்லடத்தில் தாமரை மாநாடு என்ற பெயரில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அண்ணாமலை கலந்து கொண்டு பேச உள்ளார். இந்த பொதுக்கூட்டத்திற்கு பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு உள்ளது. சுமார் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றனர்.

    மங்–க–லத்தை அடுத்த மலைக்–கோ–வில் பகு–தி–யில் மாநாடு குறித்த பிர–சார வாக–னம் கடந்த 12-ந்தேதி முதல் தொடங்கப்–பட்டு நடை–பெற்று வரு–கிறது. பொது–மக்–க–ளுக்கு துண்டு பிர–சு–ரம் வழங்–கப்–பட்டு வரு–கிறது.

    மாநாட்டில் பங்கேற்க நூதன முறையில், தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பா.ஜ.க. நிர்வாகிகள் விசிட்டிங் கார்டில், மாநாடு நடைபெறும் இடம், தேதி அச்சிட்டு மாநாட்டிற்கு வரும்படி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து வித்தியாசமான முறையில் பிரசாரம் செய்து வருகின்றனர். அவிநாசி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், விசிட்டிங் கார்டை கொடுத்து மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

    ×