என் மலர்
நீங்கள் தேடியது "இடைத்தேர்தல் வெற்றி"
- சமீபத்தில் 5 சட்டசபைத் தொகுதிகளுக்கு ஜூன் 19 அன்று இடைத்தேர்தல் நடந்தது.
- இந்த இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
குஜராத், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 5 சட்டசபைத் தொகுதிகளுக்கு ஜூன் 19 அன்று இடைத்தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக, காங்கிரஸ், டிஎம்சி ஆகியவை தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றன.
இந்நிலையில், குஜராத் மற்றும் பஞ்சாப் சட்டசபை இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:
குஜராத் மற்றும் பஞ்சாப் இடைத்தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாபின் லூதியானா மேற்கு சட்டசபைத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் எங்கள் வேட்பாளர் சஞ்சீவ் அரோரா வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் பஞ்சாப் மக்கள் ஆம் ஆத்மி மீதான தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.
குஜராத்தின் விசாவதார் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரும், கட்சியின் முன்னாள் மாநில தலைவருமான கோபால் இத்தாலியா வெற்றி பெற்றுள்ளார். குஜராத் மக்கள் இப்போது பா.ஜ.க. மீது வெறுப்படைந்து, ஆம் ஆத்மி கட்சிமீது நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
பஞ்சாபிலும், குஜராத்திலும் ஆம் ஆத்மியை தோற்கடிக்க காங்கிரசும், பா.ஜ.க.வும் முயன்றன. ஆனால், மக்கள் அவர்களை நிராகரித்துள்ளனர்.
2027-ம் ஆண்டில் பஞ்சாப், குஜராத் ஆகிய இரு மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. சிலர் இது 2027-க்கான அரையிறுதி என கூறுகிறார்கள். 2027-ல் ஆம் ஆத்மி கட்சியின் புயல் வீசும். குஜராத்தைப் பொறுத்தவரை 2027 தேர்தல் போட்டி என்பது பா.ஜ.க-ஆம் ஆத்மி கட்சி இடையேதான் இருக்கும் என தெரிவித்தார்.
- பிரதமர் மோடி மீது மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதை இது காட்டுகிறது.
- உத்தரப்பிரதேச இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
நாடு முழுவதும் மூன்று மக்களவைத் தொகுதிகள், 7 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், உத்தர பிரதேசத்தில் 2 மக்களவைத் தொகுதிகளிலும், திரிபுராவில் 3 சட்டசபை தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றது.
பஞ்சாப்பில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி சங்ரூர் மக்களவைத் தொகுதியில் தோல்வி அடைந்தது. திரிபுராவில் பர்தோவாலி டவுன் சட்டசபை தொகுதியில் போட்டியிடட் முதல் மந்திரி மாணிக் சஹா தாம் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், இடைத்தேர்தலில் பாஜகவிற்கு மக்கள் அமோக வெற்றியை கொடுத்துள்ளதாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யும் விதம், பிரதமர் மோடி மீது அவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதை காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உத்தரப்பிதேசத்தில் அசம்கர் மற்றும் ராம்பூர் மக்களவை இடைத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றிருப்பதாக மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்துக்கு நன்றியை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
உத்தர பிரதேசத்தில் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர், குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப் பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
பாஜக பல்வேறு உள்ளாட்சித் தேர்தல்களில் வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளதகவும், அதற்காக வாக்காளர்களுக்கு நன்றி கூறுகிறேன் என்றும் ஜே.பி.நட்டா குறிப்பிட்டுள்ளார்.






