என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் அருங்காட்சியகம்"

    • போலீஸ் அருங்காட்சியகத்தில் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
    • சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போலீஸ் பேண்ட், போலீஸ் நாய் கண்காட்சி நடத்தப்படும்.

    கோவை,

    கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை ரெயில் நிலையம் எதிரில் தமிழ்நாடு போலீஸ் துறை ஹமில்டன் கிளப் அமைந்துள்ள போலீஸ் அருங்காட்சியகத்தில் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன் காரணமாக தற்காலிகமாக பொதுமக்கள் பார்வையிட அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளதால், இன்று முதல் (திங்கட்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களும்) பொதுமக்கள் பார்வைக்கு காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதியளிக்கப்படுகிறது. அருங்காட்சியகத்தின் முழு பயனைப் பெறக்கூடிய வகையில் இலவச "வழிகாட்டு பயணம்" கீழ்கண்ட நேரங்களில் நடத்தப்படும்.

    காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை.

    மதியம் 12.30 மணி முதல் 01.30 மணி வரை.

    மதியம் 03.00 மணி முதல் 04.00 மணி வரை.

    மாலை 05.00 மணி முதல் 06.00 மணி வரை நடத்தப்படுகிறது.

    ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போலீஸ் பேண்ட், போலீஸ் நாய் கண்காட்சி ஆகியவை மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடத்தப்படும். வார நாட்களில் இரவு 7 மணி முதல் 10மணி வரை திறந்தவெளி பகுதியை கூட்டங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் வாடகை அடிப்படையில் கொடுக்கப்படும்.

    மேலும் பார்வையாளர்களுக்கு கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.10 மட்டும் வசூலிக்கப்படும். இதில் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளி,கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பார்வையாளர்கள் கட்டணம் இலவசம்.

    அரசு சாரா மற்ற தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பார்வையாளர்கள் கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.5 மட்டும் வசூலிக்கப்படும்.இந்த வாய்ப்பினை பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாநகர் போலீஸ் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவில் முதல் முறையாக தேசிய போலீஸ் அருங்காட்சியகம் டெல்லியில் விரைவில் தொடங்கப்பட்ட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #policemuseum
    புதுடெல்லி:

    இந்தியாவின் முதல் தேசிய போலீஸ் அருங்காட்சியகம் டெல்லியின் அமைக்க மத்திய அரசு திட்டம் தீட்டி உள்ளது. அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. டெல்லியின் லுடைன்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது.

    தேசிய போலீஸ் நினைவு இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் போலீசின் வரலாற்றை அனைவரும் அறியும் வகையில் அவர்கள் பயன்படுத்திய சீருடை, ஆயுதங்கள், கலைப்பொருட்கள், துப்பாக்கிகள் மற்றும் மத்திய, மாநில பாதுகாப்பு படையினர் பயன்படுத்திய அனைத்து பொருட்களும் வைக்கப்படும்.

    இந்த அருங்காட்சியகத்தை வருகின்ற அக்டோபர் மாதம் போலீஸ் நினைவு தினமான 1-ம் தேதி பிரதமர் மோடி அல்லது உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கால் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இது காவல் துறை குறித்த அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். #policemuseum

    கோவையில் போலீஸ் அருங்காட்சியத்தை ரிப்பன் வெட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். #TNCM #EdappadiPalanisamy
    கோவை:

    கோவை ரெயில் நிலையம் எதிர்புறம் போலீஸ் அருங்காட்சியகம் உள்ளது.

    1918-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம் ஆங்கிலேய ஆட்சியாளர் பெயரில் ‘ஹேமில்டன் கிளப்’ என அழைக்கப்பட்டு வந்தது.  1951-ம் ஆண்டு தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கட்டிடங்கள் பழுதடைந்த காரணத்தால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    2016-ம் ஆண்டு கோவை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த அமல் ராஜ் புதுப்பித்து காவல் துறையின் வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் பல்வேறு பொருட்களை வைத்து அருங்காட்சியகமாக மாற்ற முயற்சி எடுத்தார். அதன்படி இங்கு ஏராளமான போர் கருவிகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.

    இந்த அருங்காட்சியகம் திறப்பு விழா இன்று நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு போலீஸ் அருங்காட்சியகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

    கோவை அரசு ஆஸ்பத்திரி சார்பில் விமான நிலையத்தில் நடந்த ரத்ததான முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அருகில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    பின்னர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த கார்கில் போரில் இந்திய ராணுவம் பயன்படுத்திய பீரங்கிகள், விடுதலை புலிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நீர் மூழ்கி கப்பல்கள், போலீஸ் ஆவணங்கள், சந்தன கடத்தல் வீரப்பன் மற்றும், மலையூர் மம்பட்டியானிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள், ராணுவ ஏவுகணை, காவலர்களுக்கு வழங்கப்பட்ட பதக்கம் ஆகியவற்றை பார்வையிட்டார்.

    விழாவில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி,  துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தமிழக போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன், கலெக்டர் ஹரிஹரன், மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யா, மேற்கு மண்டல ஐ.ஜி. பாரி, டி.ஐ.ஜி. கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி, மாவட்ட வருவாய் அலவலர் துரை ரவிச்சந்திரன், மாநகராட்சி துணை கமிஷனர் காந்திமதி, மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.

    விமான நிலையத்தில்  அ.தி.மு.க-வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.  முதலமைச்சரை வரவேற்று அவினாசி சாலையில் அ.தி.மு.க. கொடி கட்டப்பட்டிருந்தது. வரவேற்பு பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன. அருங்காட்சியக திறப்பு விழா முடிந்ததும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊட்டிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு நாளை(வெள்ளிக்கிழமை) மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

    முன்னதாக கோவை விமான நிலையத்தில் அரசு ஆஸ்பத்திரி சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.   #TNCM #EdappadiPalanisamy
    ×