search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவின் முதல் தேசிய போலீஸ் அருங்காட்சியகம் - டெல்லியில் விரைவில் திறக்கப்படும்
    X

    இந்தியாவின் முதல் தேசிய போலீஸ் அருங்காட்சியகம் - டெல்லியில் விரைவில் திறக்கப்படும்

    இந்தியாவில் முதல் முறையாக தேசிய போலீஸ் அருங்காட்சியகம் டெல்லியில் விரைவில் தொடங்கப்பட்ட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #policemuseum
    புதுடெல்லி:

    இந்தியாவின் முதல் தேசிய போலீஸ் அருங்காட்சியகம் டெல்லியின் அமைக்க மத்திய அரசு திட்டம் தீட்டி உள்ளது. அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. டெல்லியின் லுடைன்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது.

    தேசிய போலீஸ் நினைவு இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் போலீசின் வரலாற்றை அனைவரும் அறியும் வகையில் அவர்கள் பயன்படுத்திய சீருடை, ஆயுதங்கள், கலைப்பொருட்கள், துப்பாக்கிகள் மற்றும் மத்திய, மாநில பாதுகாப்பு படையினர் பயன்படுத்திய அனைத்து பொருட்களும் வைக்கப்படும்.

    இந்த அருங்காட்சியகத்தை வருகின்ற அக்டோபர் மாதம் போலீஸ் நினைவு தினமான 1-ம் தேதி பிரதமர் மோடி அல்லது உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கால் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இது காவல் துறை குறித்த அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். #policemuseum

    Next Story
    ×