என் மலர்
நீங்கள் தேடியது "ராஜ்பவன்"
- ஆளுநர் மாளிகைகள் 'ராஜ்பவன்' என்று அழைக்கப்படுகிறது.
- நமது ஆளுநரின் இந்த முயற்சி ராஜ்பவன் வரலாற்றில் ஒரு மைல்கல்.
சென்னை:
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆளுநர் மாளிகைகள் 'ராஜ் பவன்' என்று அழைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் யூனியன் பிரதேசங்களில் உள்ள துணை நிலை ஆளுனர்களின் மாளிகை 'ராஜ் நிவாஸ்' என்று அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆளுநர் மாளிகையின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார். இந்த பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதில் இந்தியா முழுவதும் உள்ள ராஜ்பவன்கள் 'லோக் பவன்' என்றும், ராஜ் நிவாஸ்கள் 'லோக் நிவாஸ்' என்றும் ஒரே மாதிரியாக பெயர் மாற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதில் 'லோக் பவன்' என்பது தமிழில் 'மக்கள் பவன்' என்று பொருள்படும். இதையடுத்து ஒவ்வொரு மாநிலங்களிலும் ராஜ் பவன் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர் பாக ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆலோசகர் திருஞான சம்பந்தம் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
ஆளுநர் மாளிகைகள் 'ராஜ்பவன்' என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜனாதிபதி மாளிகையில் நடந்த ஆளுநர்கள் மாநாட்டில் தலைமையேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி 'ராஜ்பவன்' என்பதை 'மக்கள் பவன்' என மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதை அனைவரும் வரவேற்ற நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சகமும் அதை ஏற்று அதிகாரபூர்வமாக 'ராஜ்பவன்' என்பதை இனி 'மக்கள் பவன்' என அனைத்து மாநிலங்களும் மாற்றி அழைக்க உத்தரவிட்டுள்ளது.
நமது ஆளுநரின் இந்த முயற்சி ராஜ்பவன் வரலாற்றில் ஒரு மைல்கல். அவரது கோரிக்கையை நிறைவேற்றிய மத்திய அரசுக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
- போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூர்:
பெங்களூர் போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ராஜ்பவனில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதைதொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார் உடனடியாக ராஜ்பவனுக்கு விரைந்து சென்று அப்பகுதி முழுவதும் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் பெங்களூரு விதான் சவுதா போலீஸ் நிலைய போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி எண்ணை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வந்தனர். இதில் அந்த தொலைபேசி எண் கோலார் மாவட்டம் கோலார் டவுன் பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவருடையது என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அவருக்கு எந்த உள்நோக்கமும் இல்லை எனவும், விளையாட்டாக இதை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஜ்பவனில் இருந்து போலீசார் வெளியேற வேண்டும் என்றார் கவர்னர்.
- முதல் மந்திரியிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநில முதல் மந்திரியாக மம்தா பானர்ஜி பதவி வகித்து வருகிறார். இவருக்கும் கவர்னர் ஆனந்தபோசுக்கும் இடையே பல விஷயங்களில் மோதல் இருந்து வருகிறது.
பாராளுமன்ற தேர்தல் முடிந்தபின் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி ராஜ்பவனுக்குச் சென்றார். ஆனால் அங்கு 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் அப்பகுதியில் கூட்டம் கூடுவதற்கு அனுமதி இல்லை எனக்கூறி அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இதற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், மேற்கு வங்காள கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தற்போதைய பொறுப்பாளர் மற்றும் அவரது குழுவினர் இருப்பது எனது தனிப்பட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என நம்புவதற்கு எனக்கு காரணங்கள் உள்ளன.
ராஜ்பவனில் கொல்கத்தா காவல் துறையிடம் நான் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியிடம் தெரிவித்தேன், ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
போலீசார் அனைவரும் ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும் என கவர்னர் ஆனந்த போஸ் நேற்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






