என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரிக்ஸ் மாநாடு"

    • பிரிக்ஸ் உச்சி மாநாடு அடுத்த மாதம் 6 மற்றும் 7-ம் தேதிகளில் பிரேசிலில் நடக்கிறது.
    • பிரதமர் மோடி அடுத்த வாரம் பிரேசில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியது.

    புதுடெல்லி:

    பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு அடுத்த மாதம் (ஜூலை) 6 மற்றும் 7-ம் தேதிகளில் பிரேசிலில் நடக்கிறது. இந்த அமைப்பின் உறுப்பு நாடான இந்தியாவுக்கும் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    இதை ஏற்று மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அடுத்த வாரம் பிரேசில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்தப் பயணத்துடன் மேலும் 4 நாடுகளில் அவர் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். அதன்படி கானா, டிரினிடாட் டொபாகோ, அர்ஜென்டினா மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்கும் செல்ல உள்ளதாகத் தெரிகிறது.

    ஆனாலும், இந்தப் பயணம் குறித்து மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

    பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேறு உரையாற்றிய பிரதமர் மோடி, சிறந்த உலகை உருவாக்க தொழில்துறை தொழில்நுட்பமும், பலதரப்பட்ட ஒத்துழைப்பும் தேவை என தெரிவித்தார். #PMModi #BRICS
    ஜொகனஸ்பர்க் :

    ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றில் 5 நாட்கள் சுற்றுப்பயணம்  மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் இன்று நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். 

    மாநாட்டில் உரையாற்றிய மோடி, இன்றைய உலகம் எல்லா விதமான மாற்றங்களுக்கும் குறுக்கு வழியை தேடுகிறது. 

    சிறந்த உலகை உருவாக்குவதற்கு தொழில்துறை தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் பலதரபட்ட ஒத்துழைப்பு போன்றவை அவசியம். எனவே அனைத்து நாடுகளும் அவர்களின் திறனையும்  கொள்கைகளையும் கண்டிப்பாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    பள்ளிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் எதிர்கால இளைஞர்களை தயார்படுத்தும் விதமாக தொழில்துறை உற்பத்தி, வடிவமைப்பு, உற்பத்தி போன்றவற்றுடன்  நமது பாடத்திட்டங்களை வடிவமைக்க வேண்டும்.

    மேலும், வெளிநாடுகளில் வேலை செய்யும் பிரிக்ஸ் நாட்டை சேர்ந்த 20 கோடி தொழிலாளர்களின் நலனுக்கான உலகளாவிய பாதுகாப்புக் கட்டமைப்பை ஒன்றினைந்து உருவாக்க வேண்டும் எனவும் பயங்கரவாதமும் தீவிரவாதமும் மிகப்பெரிய அச்சுறுத்தல்களாக விளங்குவதாகவும் மோடி குறிப்பிட்டார்.

    மேலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை மாற்றியமைக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் வலியுறுத்தினார். #PMModi #BRICS
    ×