என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேமுதிக மாநாடு"

    • ஜனவரி மாதத்துக்கு முன்பாக அனைத்து கட்சிகளும் தெளிவான முடிவை எடுக்கும்.
    • முறைகேட்டை தடுக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது.

    தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கடலூரில் ஜனவரி 9-ந் தேதி நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்து மிகத்தெளிவான அறிவிப்பு வரும். அதுவரை யாருடைய ஊகங்களுக்கும், கேள்விகளுக்கும் இது தான் பதில்.

    ஒரு பக்கம் கூட்டணி வலுவாக இருப்பதாகவும், இன்னொரு பக்கம் வலுவில்லை என சிலர் கூறினாலும், அது போன்ற நிலைமை கிடையாது. தேர்தலுக்கு இன்னும் 7, 8 மாதங்கள் உள்ள நிலையில், அதற்குள் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். பிரிந்தவர்கள் கூடுவதும், கூடியவர்கள் பிரிவதும் நிகழலாம்.

    தமிழகத்தில் இதுபோல எத்தனை ஆண்டுகள் பார்த்து வருகிறோம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை. ஜனவரி மாதத்துக்கு முன்பாக அனைத்து கட்சிகளும் தெளிவான முடிவை எடுக்கும்.

    வாக்கு திருட்டு பீகாரில் மட்டும் நடைபெறவில்லை. தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடைபெறுகிறது. எனவே, இந்த முறைகேட்டை தடுக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது. இதற்கு நீதிபதிகள் துணையாக இருக்க வேண்டும்.

    ஜனநாயக ரீதியாக நடைபெறும் தேர்தல் நியாயமானதாக, மக்களுக்கான உண்மையான தேர்தலாக இருப்பது அவசியம். வரும் தேர்தலாவது நியாயமான தேர்தலாக நடைபெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி கலை நிகழ்ச்சியுடன் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
    • மாநாட்டில் அனைவரும் கலந்து கொண்டு மாநாட்டை வெற்றி அடைய செய்ய வேண்டும்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தே.மு.தி.க.வின் "மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0" வருகிற ஜனவரி மாதம் 9-ந்தேதி மாலை 2.45 மணிக்கு கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பாசார் கிராமத்தில் நடைபெறுகிறது. தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி கலை நிகழ்ச்சியுடன் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

    மாநாட்டில் அனைவரும் கலந்து கொண்டு மாநாட்டை வெற்றி அடைய செய்ய வேண்டும் என்று பிரேமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற ஜனவரியில் கடலூர் மாவட்டத்தில் மாபெரும் மாநாடு நடைபெற இருக்கிறது.
    • மாநாடு வெற்றி பெற தே.மு.தி.க. சார்பில் வாழ்த்துகள்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் தே.மு.தி.க. சார்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:-

    திட்டக்குடி, சிதம்பரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் தொகுதிகள் விஜயகாந்தின் கோட்டை. வருகிற சட்டமன்ற தேர்தலில் திட்டக்குடி தொகுதியை மீண்டும் முரசு சின்னம் வென்று சரித்திரம் படைக்கும்.

    வருகிற ஜனவரியில் கடலூர் மாவட்டத்தில் மாபெரும் மாநாடு நடைபெற இருக்கிறது. விஜயகாந்த் வெற்றி பெற்ற முதல் தொகுதி விருத்தாசலம்.

    அந்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த வெற்றி தொடரனும். திட்டக்குடி-விருத்தாசலம் தொகுதிக்கு இடையே உள்ள பகுதியில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    இது உலகமே திரும்பி பார்க்கும் மாநாடாக இருக்கும். 2011 வரலாற்று வெற்றியை மீண்டும் திரும்ப பெறுவாம் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சி முடிந்த பின் பிரேமலதா, அங்கு கூடியிருந்த பெண் தொண்டர்களுடன் கோலாட்டம் ஆடினார். பின்னர் பிரேமலதா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மதுரையில் இன்று நடக்கும் விஜய் மாநாட்டில் விஜயகாந்த் படம் வைத்தது பிரச்சனை இல்லை. ஆனால் அக்கட்சி சார்பில் அரசியலில் எங்களுக்கு விஜயகாந்த் தான் மானசீக குரு என தெரிவிக்க வேண்டும்.

    மாநாடு வெற்றி பெற தே.மு.தி.க. சார்பில் வாழ்த்துகள்.

    விருத்தாசலம் தொகுதியில் நான் போட்டியிடுவதாக இதுவரை முடிவு எடுக்கவில்லை.

    திட்டக்குடி தொகுதியில் மாநாடு நடத்தி போட்டியிடுவது குறித்து தெரிவிப்பேன். 234 தொகுதிகளும் எங்களுக்கு சாதகமாகத் தான் உள்ளது. துரோகிகள் காலம் முடிந்து விட்டது. விசுவாசிகள் தான் உடன் இருக்கிறார்கள். கூட்டணி அமைந்த பிறகு எதுவாக இருந்தாலும் தெரிவிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பூரில் நடைபெற இருந்த தே.மு.தி.க. மாநாடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் தேதி பின்னர் தலைமை கழகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். #DMDK
    சென்னை:

    தே.மு.தி.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தே.மு.தி.க.வின் தலைமை செயற்குழு கூட்டத்தில் செப்டம்பர் 16-ந்தேதி திருப்பூர் மாவட்டத்தில் மாநாடு நடத்தப்படும் என முடிவு எடுக்கப்பட்டது. தற்போது அந்த மாநாடு தள்ளிவைக்கப்படுகிறது. மாநாடு நடைபெறும் தேதி பின்னர் தலைமை கழகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMDK
    ×