என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பங்குச்சந்தை மோசடி"

    • கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது.
    • முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்தவர் குமார் (வயது 34). அரசுப்பள்ளி ஆசிரியர். இவரது வாட்ஸ்அப்பிற்கு கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது.

    அதில் சில கம்பெனிகளின் பங்கு முதலீட்டு விவரங்கள் கொடுக்கப்பட்டு, அதில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என இருந்தது. அதில் ஒரு இணையதள முகவரியும் இருந்தது. அந்த 'லிங்க்'கை கிளிக் செய்த குமார், தன் விவரங்களை பதிந்து தனக்கான பக்கத்தை உருவாக்கினார்.

    மேலும் அதில், சிறிதளவு முதலீடு செய்த குமாருக்கு அதிகளவு லாபமும் கிடைத்தது. இதையடுத்து தன்னிடம் இருந்த, 20 லட்சத்து, 85 ஆயிரம் ரூபாயை அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு மொத்தமாக அனுப்பினார்.

    இவரது முதலீடு, லாபத்துடன் இணையதள பக்கத்தில் காண்பித்த போதும், அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை. இவரை தொடர்பு கொண்ட மொபைல் எண்களும் 'சுவிட்ச் ஆப்' ஆனது. ஓரிரு நாளில் குறிப்பிட்ட அந்த இணையதள பக்கமும் முடங்கியது.

    இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குமார், இது குறித்து நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பங்குச்சந்தையில் குழப்பத்தை ஏற்படுத்தி சுமார் 494 மில்லியன் எகிப்து பவுண்ட் வரை மோசடி செய்ததாக குற்றச்சாட்டில் எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாராக்கின் 2 மகன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். #Egypt
    கெய்ரோ:

    எகிப்து நாட்டில் அதிபர், பிரதமர் உள்பட பல முக்கிய பதவிகளில் இருந்த ஹோஸ்னி முபாரக் தற்போது வயோதிகம் காரணமாக ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில், அவரின் இரண்டு மகன்களாக அலா, கமால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கடந்த 2012-ம் ஆண்டு அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எகிப்து பங்குச்சந்தையில் குழப்பத்தை ஏற்படுத்தி சுமார் 494 மில்லியன் பவுண்ட் வரை இருவரும் மோசடி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
    ×