என் மலர்
நீங்கள் தேடியது "வீட்டு சிறை"
- நன்றாக படிக்கும் மவுனிகா வகுப்பில் முதல் மாணவியாக திகழ்ந்தார்.
- அக்கம்பக்கத்தினர் கேட்டதற்கு ஆத்திரத்தில் அவர்களை கடுமையாக திட்டியுள்ளார்.
'பெண் குழந்தைகளை பெற்ற தந்தைக்குதான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை' என்ற சினிமா வரிகள் மகத்துவமானது. அதே தந்தைக்குதான் தெரியும் அந்த குழந்தையை வளர்த்து திருமணம் செய்து வைப்பது எவ்வளவு கஷ்டம் என்று.
ஆமாம். பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு முழுமையாக இருக்கிறதா? என்றால் பாதுகாப்பு இருக்கிறது என்று உறுதியாக கூறமுடியாது.
அதற்காக நாம் பெண் குழந்தைகளை பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, வெளியிடத்திற்கோ அனுப்பாமல் இருக்க முடியுமா? அனுப்பித்தான் ஆக வேண்டும்.
ஆனால் ஆந்திராவில் ஒரு தாய், நாள்தோறும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை பார்த்து பயந்து தனது மகளை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்திருந்த கொடுமை நடந்துள்ளது. கணவர் இல்லாததால் பள்ளியில் நன்றாக படித்துக்கொண்டிருந்த மகள் பருவ வயதை எட்டியதும் வெளியுலகமே தெரியாமல் வீட்டுக்குள் பூட்டி வைத்துள்ளார்.
அந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரத்தில் வசித்து வருபவர் பாக்கியலட்சுமி. கணவர் இறந்துவிட்டதால் மகள் மவுனிகாவுடன் வசித்து வந்தார். மவுனிகா அந்தப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வந்தார்.
நன்றாக படிக்கும் மவுனிகா வகுப்பில் முதல் மாணவியாக திகழ்ந்தார். இதற்கிடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மவுனிகா பருவவயதை எட்டினார். இதனால் அவரை பள்ளிக்கு அனுப்பாமல் பாக்கியலட்சுமி வீட்டிலேயே வைத்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல் வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் வீட்டுக்குள்ளேயே மகளை அடைத்து வைத்துள்ளார். ஒரு நாள் இல்லை, 2 நாள் இல்லை. 3 ஆண்டுகளாக மகளை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்துள்ளார் அந்த தாய்.
ஓய்வூதியம் மூலமாக காலத்தை ஓட்டி வந்த பாக்கியலட்சுமி, வெளியிடங்களுக்கு செல்லும்போது வீட்டின் மின் இணைப்பை துண்டித்துள்ளார். மகளை உள்ளே வைத்து வீட்டை பூட்டி சென்று வந்துள்ளார். இருட்டில் அந்த சிறுமி தவித்து வந்தார்.
அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து கேட்டதற்கு ஆத்திரத்தில் அவர்களை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்த விஷயத்தை அறிந்த அந்தப்பகுதி அங்கன்வாடி ஊழியர் ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து போலீசார் பாக்கியலட்சுமியின் வீட்டுக்கு நேரில் சென்று கதவை தட்டினர். ஆனால் திறக்கவில்லை. அப்போது அதிகாரி ஒருவர் வீட்டை அளக்க சர்வேயர் வந்துள்ளேன் என்று சொன்னதும் பாக்கியலட்சுமி கதவை திறந்துள்ளார். உடனே போலீசாரும், அதிகாரிகளும் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்து சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் தாயாருக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் எழுதிய கடிதமும், அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி பேசும் காட்சிகள் அடங்கிய வீடியோவும் இன்று வாட்ஸ்-அப்பில் பரவியது.
அந்த வீடியோவில் பேசும் மாணவி, நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருவதாக கூறுகிறார். அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் காதல் மலர்ந்தது.
இது மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் மாணவியை எச்சரித்தனர். ஆனால் மாணவி காதலை கைவிட மறுத்தார். இதனால் பெற்றோர் அவரை வீட்டிலேயே சிறை வைத்து விட்டனர்.
வீட்டில் சிறை வைத்ததால் வீட்டை விட்டு வெளியே வர முடியாததால் இந்த வீடியோவை வாட்ஸ்-அப்பில் வெளியிடுவதாகவும், இதை பார்ப்பவர்கள் தங்களுக்கு உதவும்படியும் மாணவி கண்ணீர் விடுகிறார். என்னை வீட்டில் சிறை வைத்த பெற்றோர் என் காதலன் மீது நான் போலீசில் புகார் செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்துகிறார்கள். காதலன் மீது புகார் கொடுக்காவிட்டால் அவரை கொன்று விடுவதாகவும் மிரட்டுகிறார்கள்.
இந்த ஜனநாயக நாட்டில் காதலிக்க உரிமை இல்லையா? காதலித்தால் கொலை செய்யப்பட வேண்டுமா? என்றும் மாணவி கேள்வி எழுப்பி உள்ளார். இந்த வாட்ஸ்-அப் வீடியோ இன்று காலை முதல் தான் முக்கிய பிரமுகர்களின் செல்போனில் பரவ தொடங்கியது.
மின்னல் வேகத்தில் இந்த செய்தி பலரது செல்போனிலும் பரவியதை தொடர்ந்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் வாட்ஸ்-அப்பில் வெளியான வீடியோ குறித்து விசாரணையில் இறங்கி உள்ளனர். அதில் கூறப்பட்ட விலாசத்தில் அத்தகைய சம்பவம் நடந்து உள்ளதா? மாணவி சிறை வைக்கப்பட்டிருக்கிறாரா? என்பது பற்றியும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். #Whatsapp






