என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் நிறுவன ஊழியர் கொலை"

    மணலியில் இன்றுகாலை வீட்டின் முன்பு தனியார் நிறுவன ஊழியர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவொற்றியூர்:

    மணலி அடுத்த சின்ன சேக்காடு, பார்த்தசாரதி தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது 55). எண்ணூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை 6 மணி அளவில் கோபால் அருகில் உள்ள கடையில் செய்தித்தாள் வாங்கிவிட்டு வீட்டுக்கு நடந்து வந்தார். வீட்டு முன்பு வந்தபோது மர்ம வாலிபர் ஒருவர் அவரை பின்தொடர்ந்து வந்தார்.

    திடீரென அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கோபாலை சரமாரியாக வெட்டினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் உயிருக்கு போராடினார்.

    உடனே மர்ம வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கோபாலை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் போகும் வழியிலேயே கோபால் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    கொலையுண்ட கோபாலுக்கு மீனாட்சி என்ற மனைவியும், கார்த்திகேயன் என்ற மகனும், கோகிலா என்ற மகளும் உள்ளனர். பிரசவத்துக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு கோகிலா பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தார்.

    இன்று காலை கொலை நடந்த போது வீட்டின் உள்ளே கோபாலின் மனைவி மற்றும் மகன், மகள் இருந்தனர். கொலையுண்ட கோபாலின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    கோபால் கொலைக்கான காரணம் என்ன? கொலையாளி யார் என்று தெரியவில்லை. வேலை பார்த்த இடத்தில் அவருக்கு யாருடனும் மோதல் உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வீட்டின் முன்பு தனியார் நிறுவன ஊழியர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் மணலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கருதி தனியார் நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்டார்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்தம் சாலை ஓம் சக்தி நகரைச் சேர்ந்தவர் பிராங்கிளின் அருள்தாஸ் (வயது 46). இவர் ஓசூர் அருகே உள்ள ஒரு தனியார் பேட்டரி கம்பெனியில் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஹெலன் ஜாஸ்மின் (43). இவர் உனிசெட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    ஹெலன் ஜாஸ்மினின் சகோதரி பேபி கிறிஸ்டியா (46). இவரது கணவர் ரவிக்குமார் (50). டைலர். இவர்கள் தளி கும்பார தெருவில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பேபி கிறிஸ்டியா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    நேற்று மாலை தளி கும்பார தெருவில் உள்ள ரவிக்குமாரின் வீட்டிற்கு பிராங்கிளின் அருள்தாஸ் சென்றார். அந்த நேரம் ரவிக்குமார்-பிராங்கிளின் அருள்தாஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ரவிக்குமார் வீட்டின் முன்பு இருந்த பெரிய கல்லை தூக்கி பிராங்கிளின் அருள்தாஸ் தலை மீது போட்டார். இதில் அவர் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இந்த கொலை குறித்து தகவலறிந்த தளி போலீசார் அங்கு சென்று ரவிக்குமாரை கைது செய்து கொலைக்கான காரணம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது போலீசாரிடம் ரவிக்குமார் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    தளி பி.டி.ஓ. அலுவலகத்தில் வேலை பார்த்த தேவநேசனின் மகள் பேபி கிறிஸ்டியா என்பவரை கடந்த 30 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டேன். நாங்கள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தோம். இந்த நிலையில் அவரது சகோதரி ஜாஸ்மினின் கணவர் பிராங்களின் அருள்தாசும், எனது மனைவி பேபி கிறிஸ்டியாவும் அடிக்கடி பேசி பழகி வந்ததாக தெரியவந்தது. இதனால் இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் எனது மனைவியை கண்டித்தேன். இதனால் கோபித்து கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    எங்களுக்குள் ஏற்பட்ட தகராறு குறித்து கேள்விப்பட்ட பிராங்களின் அருள்தாஸ் நேற்று எனது வீட்டிற்கு வந்தார். அவர் எனது மனைவியுடன் திரும்ப சேர்ந்து வாழுமாறு என்னிடம் கூறினார்.

    அப்போது நான், உன்னால் தான் எனது மனைவி என்னிடம் இருந்து பிரிந்து சென்று விட்டார் என்று கூறி தகராறில் ஈடுபட்டேன். இதில் ஆத்திரம் அடைந்த நான் அவரை கீழே தள்ளிவிட்டேன். உடனே அருகில் இருந்த கல்லை எடுத்து அவரது தலையில் போட்டு கொலை செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்டார். 2 பேர் கத்தியால் குத்தப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

    மதுரை:

    மதுரை தெற்குவாசல் போலீஸ் சரகத்துக்குட்பட்ட காஜா தெருவை சேர்ந்தவர் ஜாகீர்உசேன். இவரது மகன் பஷீர் முகமது (வயது 26). இவர் கே.கே. நகர் 80 அடி ரோட்டில் உள்ள மோட்டர் சைக்கிள் விற்பனையகத்தில் வேலை பார்த்து வந்தார்.

    விடுமுறை நாள் என்பதால் நேற்று மாலை பஷீர் முகமது தனது நண்பர்கள் பெருங்குடி பள்ளி வாசல்தெருவை சேர்ந்த சுல்தான் அலாவுதீன், வில்லாபுரம் ஹவுசிங் போர்டை சேர்ந்த வீரார் அப்துல்லா (28), தெற்கு மாசி வீதி முகமது யூசுப் (25) மற்றும் சிலருடன் சோலையழகுபுரத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் மதுகுடிக்க சென்றார்.

    அப்போது சுற்றுலா செல்வது தொடர்பாக பஷீர்முகமதுவுக்கும், சுல்தான் அலாவுதீனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். இதனால் சுல்தான் அலாவுதீன் அங்கிருந்து சென்றுவிட்டார்.

    மதுகுடித்துவிட்டு பஷீர்முகமது, நண்பர்கள் வீரார் அப்துல்லா, முகமது யூசுப் ஆகியோர் பாண்டிய வேளாளர் தெரு சந்திப்பில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சுல்தான் அலாவுதீன் மீண்டும் அவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த சுல்தான் அலாவுதீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பஷீர் முகமதுவை கொடூரமாக குத்தினார். இதை தடுக்க வந்த வீரார் அப்துல்லா, முகமது யூசுப்புக்கும் கத்திக் குத்து விழுந்தது.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த 3 பேரையும் அங்கிருந்த வர்கள் மீட்டு ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் வழியிலேயே பஷீர் முகமது பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் ஆபத்தானநிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சுல்தான் அலாவுதீனை தேடி வருகின்றனர்.

    ×