என் மலர்
நீங்கள் தேடியது "போலீசார் காயம்"
மேற்கு வங்கம் மாநிலத்தின் முதல் மந்திரி மம்தா பானர்ஜி பாதுகாப்புக்கு சென்ற வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 2 போலீசர் காயமடைந்தனர். #MamataBanerjee #ConvoyOverturns
கொல்கத்தா:
மேற்கு வங்கம் மாநிலத்தின் ஹவுரா மாவட்டத்தில் தக்ஷினேஸ்வரர் காளி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கைவாக் திறப்பு விழா நேற்று நடந்தது.
இந்நிலையில், முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேற்று தனது பாதுகாப்பு வாகனங்களுடன் அந்த கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார்.
சலாப் என்ற இடத்தின் அருகே வரும்போது, முதல் மந்திரிக்கு பாதுகாப்பாக வந்த வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 போலீசார் காயம் அடைந்தனர். சக போலீசார் அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதன்பின்னர், முதல் மந்திரி மம்தா பானர்ஜி அங்கிருந்து தனது பயணத்தை தொடர்ந்தார்.
முதல் மந்திரி பாதுகாப்புக்கு சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது. #MamataBanerjee #ConvoyOverturns
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே காவல் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு போலீசார் படுகாயம் அடைந்தனர். #BombBlast #PoliceInjured
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் உள்ளது மம்சாபுரம் காவல் நிலையம். நேற்று முன்தினம் ரோந்து சென்ற போலீசார் 7 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர். அவற்றை காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.
இந்நிலையில், மம்சாபுரம் காவல் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் பணி இன்று நடைபெற்றது.
அப்போது அதில் இரு நாட்டு வெடிகுண்டுகள் திடீரென வெடித்தன. இதில் காவல் நிலையத்தில் இருந்த 2 போலீசாருக்கு படுகாயம் ஏற்பட்டது.
காவலர்கள் தேவதாஸ் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் மேல் சிகிச்சைக்க்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
காவல் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து போலீசார் காயமடைந்தது அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #BombBlast #PoliceInjured






