என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிள் லாரி மோதல்"

    பாலக்கோடு அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த வீராசனூர் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் ஆனந்தன் (வயது 26). இவர் நேற்று பாலக்கோடு அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்றார். பின்னர், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். 

    அப்போது சர்க்கரை ஆலை பஸ் நிறுத்தம் பகுதியை கடந்து செல்லும்போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆனந்தனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான ஆனந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    எல்லைபிள்ளைச்சாவடியில் இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் பெண் பரிதாபமாக இறந்தார். அவரது கணவர் படுகாயம் அடைந்தார்.

    புதுச்சேரி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கீழ்கொடுங்காலூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.(வயது60), விவசாயி. இவருடைய மனைவி பானுமதி (55). இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலூரில் உள்ள தனது மகள் ராஜேஸ்வரி வீட்டுக்கு வந்திருந்தனர்.

    இன்று காலை இருவரும் மோட்டார் சைக்கிளில் புதுவை வழியாக சொந்த ஊருக்கு புறப்பட்டனர். எல்லைப்பிள்ளைச்சாவடி 100 அடி ரோடு வணிகவரித்துறை அலுவலகம் அருகே வந்த போது பின்னாள் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கில் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கோவிந்தராஜூம்-பானுமதியும் படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக அந்த வழியாக வந்தவர்கள் இவர்களை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே பானுமதி பரிதாபமாக இறந்து போனார். கோவிந்தராஜ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து வடக்கு பகுதி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, ஏட்டு ரவிக்குமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செய்யாற்றில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி சென்ற லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    தூசி:

    தூசி அருகே மடிப்பாக்கம் கிராமம் சமுதாய கூடம் தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் மணிகண்டன் (வயது 28). இவர், மாங்கால் கூட்டு சாலையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மணிகண்டன் வழக்கம் போல் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு, வேலை முடிந்து மாலையில் காஞ்சீபுரத்தில் உள்ள மாமா வீட்டுக்கு சென்றார்.

    பின்னர் அவர் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டார். மாங்கால் கூட்ரோடு சந்திப்பில் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வந்தபோது செய்யாற்றில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி சென்ற லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் தூசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×