என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூசி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: வாலிபர் பலி
Byமாலை மலர்28 Jun 2018 4:17 PM GMT (Updated: 28 Jun 2018 4:17 PM GMT)
செய்யாற்றில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி சென்ற லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தூசி:
தூசி அருகே மடிப்பாக்கம் கிராமம் சமுதாய கூடம் தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் மணிகண்டன் (வயது 28). இவர், மாங்கால் கூட்டு சாலையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மணிகண்டன் வழக்கம் போல் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு, வேலை முடிந்து மாலையில் காஞ்சீபுரத்தில் உள்ள மாமா வீட்டுக்கு சென்றார்.
பின்னர் அவர் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டார். மாங்கால் கூட்ரோடு சந்திப்பில் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வந்தபோது செய்யாற்றில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி சென்ற லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் தூசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X