என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாவூத்"

    கதாநாயகனாக வரும் லிங்கா, கதாபாத்திரத்திற்கு நிறைவாக நடித்திருக்கிறார்.

    மும்பையில் இருந்தபடி தமிழ்நாட்டில் போதை பொருள் கடத்தல் தொழிலை செய்து வருகிறார் தாவூத். யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக ஒரு போதை கடத்தல் சாம்ராஜ்யத்தையே நடத்தி வருகிறார்.

    ஒரு பக்கம் யார் இந்த தாவூத் என்பதை தெரிந்து கொள்ள முயற்சிக்கும் அர்ஜெய் தலைமையிலான காவல்துறை தமிழ்நாட்டில் இருந்து கடத்த இருக்கும் போதை பொருளை கைப்பற்றவும் தீவிரம் காட்டுகிறது.

    மறுபக்கம், தாவுத்தின் கடத்தல் பணிகளை பார்த்து வந்த தீனா, போதை பொருளை கைப்பற்ற திட்டமிடுகிறார். மற்றொரு தரப்பும் தாவுத்தின் சாம்ராஜ்யத்தை அழிக்க நினைக்கிறது.

    இப்படி இருக்கையில், தாவுத்தின் போதைப் பொருள் சரக்கை சரியான இடத்தில் கொண்டு சேர்க்க வழக்கமான ஆட்களை பயன்படுத்தாமல், வாடகை கார் ஓட்டுனரான லிங்காவை தேர்வு செய்கிறார்.

    லிங்காவும் பணத் தேவைக்காக கடத்தலில் ஈடுபடுகிறார். இறுதியில், திட்டமிட்டபடி லிங்கா தாவுத் சரக்கை கொண்டு போய் சேர்த்தாரா? தாவுத்தின் பின்னணி என்ன? என்பது படத்தின் மீதிக்கதை..

    நடிகர்கள்

    கதாநாயகனாக வரும் லிங்கா, கதாபாத்திரத்திற்கு நிறைவாக நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் விதமாக அவரது நடிப்பு இருக்கிறது. நாயகியாக வரும் சாரா ஆச்சர், வில்லன் கூட்டத்திலேயே வலம் வருகிறார். அர்ஜெய், திலீபன், சாய் தீனா, சரத்ரவி, அபிஷேக், சாரா, வையாபுரி, ராதாரவி உள்ளிட்டோர் கதாபாத்திரங்களுக்கு பொருத்தம்.

    இயக்கம்

    படத்தின் கதை பரபரப்பாக செல்லும் விதத்தில் அமைத்திருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் ராமன். விறுவிறுப்பான காட்சிகள் படத்தை சலிப்பில்லாமல் எடுத்துச் செல்ல வைத்திருக்கிறது. தாவுத் யார் என்ற கேள்வி எழுகிறது ஆனால், அதற்கான பதிலை இன்னும் ஆழமாக சொல்லியிருக்கலாம்.

    இசை

    ராகேஷ் அம்பிகாபதியின் இசை மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம்.

    ஒளிப்பதிவு

    படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை சரத் வளையாபதி மற்றும் பிரேண்டன் சுஷாந்த் ஆகியோரது கேமரா பதிவு திரைக்கதைக்கு கச்சிதம்.

    ஆரோக்கியமான உறவு தொடர வேண்டு மானால் பாகிஸ்தான் தாவூத் இப்ராகிம், சையது சலாவுதீன் ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. #India #DawoodIbrahim #SayeedSalahudeen
    புதுடெல்லி:

    காஷ்மீர் புலவாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகளால் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒரு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாடுகள் வற்புறுத்தலை தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தானில் பதுங்கியுள்ள இந்தியாவில் தேடப்படும் நபர்களை ஒப்படைக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகள் வட்டாரம் கூறியுள்ளது. மேலும் அவர்கள் கூறியதாவது:-

    இந்தியாவுடனான ஆரோக்கியமான உறவு தொடர வேண்டும் என்ற பொறுப்புணர்வை நிரூபிக்க பாகிஸ்தான் அந்நாட்டில் தங்கியுள்ள தேடப்படும் இந்தியர்களான தாவூத் இப்ராகிம், சையது சலாவுதீன் ஆகியோரை ஒப்படைக்க வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக இருந்தால் இந்த இந்திய நபர்களை விரைவாக ஒப்படைக்க வேண்டும்.

    இப்போதைக்கு பாகிஸ்தானில் இருந்து இந்தியா எதிர்பார்ப்பது இது ஒன்று தான். இவர்கள் இந்தியாவில் தேடப்படுபவர்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளவர்கள். தாவூத் இப்ராகிம் 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்.

    ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்க தலைவரான சையது சலாவுதீன் என்கிற முகமது யூசுப் ஷா அமெரிக்காவால் சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டவர். இந்தியாவிலும் 50-க்கும் மேற்பட்ட பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடையவர். காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியது, கடத்தல், ஹவாலா பணபரிமாற்றம் போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்.

    ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தலைவர் மசூத் அசாரை பொறுத்தவரை, பாகிஸ்தான் குறைபாடுள்ள வெளியுறவு கொள்கையை பின்பற்றி வருகிறது.

    இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ×