என் மலர்
நீங்கள் தேடியது "விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்"
- விண்வெளித் துறையில் அமெரிக்கா - சீனா இடையே போட்டி அதிகரித்து வருகிறது.
- நிலாவுக்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்கா மற்றும் சீனா தீவிரமாக வேலை செய்து வருகின்றன.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா பல்வேறு விண்வெளியை ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
விண்வெளித் துறையில் அமெரிக்கா - சீனா இடையே போட்டி அதிகரித்து வருகிறது. நிலா மற்றும் செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதில் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றன. நிலா மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்கா மற்றும் சீனா தீவிரமாக வேலை செய்து வருகின்றன.
இந்நிலையில், நிலா மற்றும் சீனாவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்த விவரங்கள் சீனாவுக்கு தெரிந்துகூட கூடாது என்பதற்காக நாசாவில் வேலை செய்ய சீனர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாசா மையத்திற்கு சீனர்கள் வரவும், விண்வெளித் திட்டங்கள் தொடர்பான தரவுகளை அணுகவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தியதில் விண்வெளித்துறை ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்திய சாதனைக்கு பிரதமர் மோடி உரிமை கோருவதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. #PMModi #SpaceScientists #MissionShakthi
புதுடெல்லி:

இதை விண்வெளித்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இந்தியாவின் மிகப்பெரிய சாதனை என்று அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பெருமிதம் கொண்டாடிவரும் அதேவேளையில் எதிர்க்கட்சி தலைவர்கள் விண்வெளித்துறை ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்திய சாதனைக்கு பிரதமர் மோடி உரிமை கோருவதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
1961-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் உருவாக்கப்பட்ட இந்திய விண்வெளி திட்டம் மற்றும் பின்னர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் ஏற்படுத்தப்பட்ட இந்திய விண்வெளி ஆய்வுத்துறை எப்போதுமே பெருமைக்குரிய சாதனைகளை படைத்து இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்னெடுப்பினால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோளை விண்வெளியில் தாக்கி அழிக்கும் ஆராய்ச்சி திட்டம் இன்று முழுப்பலனை தந்துள்ளது என காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
இந்த சாதனைக்காக இந்திய விண்வெளித்துறை ஆராய்ச்சியாளர்களை பாராட்டுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு சர்வதேச ‘நாடக நாள்’ (1961-ம் ஆண்டிலிருந்து மார்ச் 27-ம் தேதி சர்வதேச நாடக அரங்க நாளாக கொண்டாடப்படுகிறது) வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்துவது நமது விண்வெளித்துறை ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்திய சாதனை. ஆனால், தேர்தல் நேரத்தில் மக்களை முட்டாள்களாக்க இதையெல்லாம் முன்வைத்து மற்றவர்களின் பணிகளுக்காக உரிமை கோருவதை பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும் என மேற்கு வங்காள மாநில நிதிமந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான பிர்ஹாட் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள வேலைவாய்ப்பின்மை, பெண்களுக்கான பாதுகாப்பின்மை என பூமியில் நம்மை சுற்றியுள்ள பல பிரச்சனைகளை மறைக்கும் வகையில் இந்த நாட்டு மக்களின் கவனத்தை ஒருமணி நேரம் விண்வெளியின் பக்கம் திசை திருப்பியுள்ளார் பிரதமர் மோடி என உத்தரப்பிரதேசம் முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
செயற்கைக்கோள் விவகாரத்தை வைத்து அரசியல் விளையாட்டு நடத்தும் மோடியை தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும் என உத்தரப்பிரதேசம் முன்னாள் முதல் மந்திரி மாயாவதியும் குறிப்பிட்டுள்ளார். #PMModi #SpaceScientists #MissionShakthi
நாட்டு மக்களுக்கு இன்று மிக முக்கிய உரையாற்றப் போவதாக தெரிவித்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, விண்ணில் செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தும் மிஷன் சக்தி சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக தனது உரையில் இன்று அறிவித்தார்.

இதை விண்வெளித்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இந்தியாவின் மிகப்பெரிய சாதனை என்று அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பெருமிதம் கொண்டாடிவரும் அதேவேளையில் எதிர்க்கட்சி தலைவர்கள் விண்வெளித்துறை ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்திய சாதனைக்கு பிரதமர் மோடி உரிமை கோருவதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
1961-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் உருவாக்கப்பட்ட இந்திய விண்வெளி திட்டம் மற்றும் பின்னர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் ஏற்படுத்தப்பட்ட இந்திய விண்வெளி ஆய்வுத்துறை எப்போதுமே பெருமைக்குரிய சாதனைகளை படைத்து இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்னெடுப்பினால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோளை விண்வெளியில் தாக்கி அழிக்கும் ஆராய்ச்சி திட்டம் இன்று முழுப்பலனை தந்துள்ளது என காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
இந்த சாதனைக்காக இந்திய விண்வெளித்துறை ஆராய்ச்சியாளர்களை பாராட்டுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு சர்வதேச ‘நாடக நாள்’ (1961-ம் ஆண்டிலிருந்து மார்ச் 27-ம் தேதி சர்வதேச நாடக அரங்க நாளாக கொண்டாடப்படுகிறது) வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்துவது நமது விண்வெளித்துறை ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்திய சாதனை. ஆனால், தேர்தல் நேரத்தில் மக்களை முட்டாள்களாக்க இதையெல்லாம் முன்வைத்து மற்றவர்களின் பணிகளுக்காக உரிமை கோருவதை பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும் என மேற்கு வங்காள மாநில நிதிமந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான பிர்ஹாட் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள வேலைவாய்ப்பின்மை, பெண்களுக்கான பாதுகாப்பின்மை என பூமியில் நம்மை சுற்றியுள்ள பல பிரச்சனைகளை மறைக்கும் வகையில் இந்த நாட்டு மக்களின் கவனத்தை ஒருமணி நேரம் விண்வெளியின் பக்கம் திசை திருப்பியுள்ளார் பிரதமர் மோடி என உத்தரப்பிரதேசம் முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
செயற்கைக்கோள் விவகாரத்தை வைத்து அரசியல் விளையாட்டு நடத்தும் மோடியை தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும் என உத்தரப்பிரதேசம் முன்னாள் முதல் மந்திரி மாயாவதியும் குறிப்பிட்டுள்ளார். #PMModi #SpaceScientists #MissionShakthi






