என் மலர்
நீங்கள் தேடியது "காஷ்மீர் பயங்கரவாதிகள்"

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டம், துஜ்ஜார் பகுதியை சேர்ந்த வியாபாரி தவ்சீப் அஹ்மத் கானி(30). கடந்த புதன்கிழமை இவர் கடையில் இருந்தபோது பயங்கரவாதிகள் இவரை கடத்திச் சென்றனர். தவ்சீப் அஹ்மத் கானியை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில், வடக்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள சேக் ஹர்வான் பகுதியில் ஒரு பழத்தோட்டத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் தவ்சீப் அஹ்மத் கானியின் பிரேதத்தை போலீசார் இன்று கண்டெடுத்துள்ளனர்.
அவரை கடத்திச் சென்ற விதம், கொல்லப்பட்ட முறையை பார்க்கும்போது இது லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளின் வெறிச்செயலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர். #JKManabducted #Manabductedbymilitants #abductedmanfounddead
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலத்தில் நாசவேலையில் ஈடுபடும் பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் வேட்டையாடி வருகிறார்கள்.
இதனால் ஆத்திரம் அடைந்த பயங்கரவாதிகள் சமீபத்தில் போலீஸ் நிலையத்தை குண்டு வீசி தாக்கினார்கள். துப்பாக்கியாலும் சுட்டனர். இதில் ஒரு போலீஸ்காரர் பலியானார்.
இந்த நிலையில் ஸ்ரீநகரின் மையப் பகுதியான கர்பாலி மொகல்லா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
இதில் 2 பேர் குண்டு பாய்ந்து பலியானார்கள். அவர்கள் இருவரும் தேசிய மாநாட்டு கட்சி தொண்டர்கள் என தெரிய வந்தது.
அரசியல் காரணங்களுக்காக அவர்களை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். பயங்கரவாதிகளை போலீசார் தேடி வருகிறார்கள். #JammuKashmir
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ட்ரால் பகுதியில் செய்னாத்தர் கிராமத்தை சேர்ந்தவர் முடாசீர் அகமது. இவர் சிறப்பு போலீஸ் அதிகாரி ஆக பணியாற்றுகிறார். நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த அவரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்று விட்டனர்.
அவரை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக உள்ளனர்.






