search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு - 2 போலீசார் படுகாயம்
    X

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு - 2 போலீசார் படுகாயம்

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ரோந்து சென்ற 2 போலீசார் மற்றும் பொதுமக்களில் ஒருவரும் படுகாயம் அடைந்தனர். #JammuKashmir #MilitantsAttack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள காகா சராய் பகுதியில் மாநில போலீசாருடன் பாதுகாப்பு படையினர் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

    இந்த தாக்குதல் 2 போலீசாரும், பொதுமக்களில் ஒருவரும் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.

    காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #JammuKashmir #MilitantsAttack
    Next Story
    ×