search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shankaraiya"

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி தலைமை தாங்கினார்.
    • சங்கரய்யா உருவ படத்திற்கு மலர் தூவி, மரியாதை செலுத்தி, இரங்கல் உரையாற்றினர்.

    ஊத்துக்குளி:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஆர்.எஸ்.சில் அனைத்து கட்சியின் சார்பில் சுதந்திர போராட்ட தியாகியும், கம்யூனிஸ்டு இயக்கத்தின் மூத்த தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளருமான மறைந்த என்.சங்கரய்யாவுக்கு அஞ்சலி கூட்டமும், இரங்கல் ஊர்வலமும் நடந்தது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி தலைமை தாங்கினார்.

    இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், திராவிட முன்னேற்ற கழக தெற்கு ஒன்றிய செயலாளர் பி.பி.ஈஸ்வரமூர்த்தி, சி.பி.ஐ. தாலுகா செயலாளர் வி.ஏ.சரவணன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வி.சுந்தர்ராஜு, அ.தி.மு.க. நகர செயலாளர் வி.கே.சின்னசாமி, காங்கிரஸ் மாவட்ட செயலாளர் எம்.சி.எஸ்.மனோஜ்குமார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி ஆகியோர் கலந்து சங்கரய்யா உருவ படத்திற்கு மலர் தூவி, மரியாதை செலுத்தி, இரங்கல் உரையாற்றினர். இதில் தி.மு.க. நகர செயலாளர் கே.கே.ராசுக்குட்டி உள்பட அனைத்து கட்சி தலைவர்களும், தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

    • விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு சங்கரய்யா உருவப்படத்திற்கு விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தி.மு.க. நிர்வாகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    விளாத்திகுளம்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா மறைந்ததை தொடர்ந்து விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு அவரின் உருவப்படத்திற்கு விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விளாத்திகுளம் தாலுகா செயலாளர் ஜோதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், விவசாய சங்கத் தலைவர் ராமலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் பாலமுருகன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் சின்னமாரிமுத்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் கேசவன், வார்டு செயலாளர் ஸ்டாலின்கென்னடி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    ×