search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துக்குளி ஆர்.எஸ்.சில் அனைத்து கட்சி சார்பில் சங்கரய்யாவுக்கு இரங்கல் ஊர்வலம்
    X

    சங்கரய்யாவுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்ட காட்சி.

    ஊத்துக்குளி ஆர்.எஸ்.சில் அனைத்து கட்சி சார்பில் சங்கரய்யாவுக்கு இரங்கல் ஊர்வலம்

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி தலைமை தாங்கினார்.
    • சங்கரய்யா உருவ படத்திற்கு மலர் தூவி, மரியாதை செலுத்தி, இரங்கல் உரையாற்றினர்.

    ஊத்துக்குளி:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஆர்.எஸ்.சில் அனைத்து கட்சியின் சார்பில் சுதந்திர போராட்ட தியாகியும், கம்யூனிஸ்டு இயக்கத்தின் மூத்த தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளருமான மறைந்த என்.சங்கரய்யாவுக்கு அஞ்சலி கூட்டமும், இரங்கல் ஊர்வலமும் நடந்தது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி தலைமை தாங்கினார்.

    இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், திராவிட முன்னேற்ற கழக தெற்கு ஒன்றிய செயலாளர் பி.பி.ஈஸ்வரமூர்த்தி, சி.பி.ஐ. தாலுகா செயலாளர் வி.ஏ.சரவணன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வி.சுந்தர்ராஜு, அ.தி.மு.க. நகர செயலாளர் வி.கே.சின்னசாமி, காங்கிரஸ் மாவட்ட செயலாளர் எம்.சி.எஸ்.மனோஜ்குமார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி ஆகியோர் கலந்து சங்கரய்யா உருவ படத்திற்கு மலர் தூவி, மரியாதை செலுத்தி, இரங்கல் உரையாற்றினர். இதில் தி.மு.க. நகர செயலாளர் கே.கே.ராசுக்குட்டி உள்பட அனைத்து கட்சி தலைவர்களும், தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×