search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "second t20 match"

    துபாயில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் தொடரையும் கைப்பற்றியது. #PAKvNZ
    துபாய்:

    பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர் அபுதாபியில் நடைபெறுகிறது. முதல் டி 20 போட்டியில் 2 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டி-20 போட்டி அபுதாபியில் நேற்று நடைபெற்றது. 

    டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் காலின் முன்ரோ 28 பந்துகளில் 44 ரன்களும், கேப்டன் கேன் வில்லியம்சன்37 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.  

    கோரி ஆண்டர்சன் 22 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இறுதியில், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் ஷகின் அப்ரிதி 3 விக்கெட் எடுத்தார்.



    இதையடுத்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. பாபர் அசாம் 40 ரன்களிலும், அசிப் அலி 38 ரன்களிலும், பகர் சமான் 24 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.

    ஆட்டத்தின் இறுதியில், மொகமது ஹபீஸ் நிலைத்து நின்று ஆடி 21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்துஅவுட்டாகாமல் பாகிஸ்தானை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். நியூசிலாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    ஆட்ட நாயகனாக ஷகின் அப்ரிதி தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் 2-0 என டி 20 தொடரை கைப்பற்றியுள்ளது. #PAKvNZ
    கார்டிஃபில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் ஹேல்ஸ் அதிரடியால் இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இங்கிலாந்து அணி. #ENGvIND
    கார்டிஃப்:

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கார்டிஃபில் இரவு 10 மணிக்கு தொடங்கியது.

    இந்த போட்டியில் இங்கிலந்து அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இந்திய அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். ரோகித் சர்மா 5 ரன்களிலும், ஷிகர் தவான் 10 ரன்களிலும், லோகேஷ் ராகுல் 6 ரன்களிலும் வெளியேறினர். இதனால் இந்தியா 3 விக்கெட்டுக்கு 22 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

    அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலியும், சுரேஷ் ரெய்னாவும் நிதானமாக ஆடினர். அணியின் எண்ணிக்கை 79 ஆக இருக்கும்போது சுரேஷ் ரெய்னா 27 ரன்னில் அவுட்டானார். அடுத்து கோலியுடன் எம்.எஸ்.தோனி சேர்ந்தார். கோலி 38 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்  விக்கெட் இழப்புக்கு  ரன்கள் எடுத்துள்ளது. தோனி ரன்களும், பாண்ட்யா ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இங்கிலாந்து அணி சார்பில் ஜேக் பால், பிளங்கட், அடில் ரஷித் ஆகியோர் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 149 ரன்களை இலக்காக கொண்டு இங்கிலந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் இறங்கினர்.

    உமேஷ் யாதவ் தனது சிறப்பான பந்து வீச்சால் தொடக்க ஆட்டக்க்காரர்களை வெளியேற்றினார். ராய் 15 ரன்னிலும், பட்லர் 14 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய ஜோ ரூட் 9 ரன்னில் வெளியேறினார்.

    அவரை தொடர்ந்து ஆடிய அலெக்ஸ் ஹேல்ஸ் ஒருபுறம் நிதானமாக ஆடினார். அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இங்கிலாந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹேல்ஸ் 41 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து டி 20 தொடர் 1-1 சமனிலையில் உள்ளது. 
    #ENGvIND #EnglandvIndia
    கார்டிஃபில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 149 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. #ENGvIND
    கார்டிஃப்:

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கார்டிஃபில் இரவு 10 மணிக்கு தொடங்கியது.

    இந்த போட்டியில் இங்கிலந்து அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இந்திய அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் முன்னணி வீரர்கள் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

    ரோகித் சர்மா 5 ரன்களிலும், ஷிகர் தவான் 10 ரன்களிலும், லோகேஷ் ராகுல் 6 ரன்களிலும் வெளியேறினர். இதனால் இந்தியா 3 விக்கெட்டுக்கு 22 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

    அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலியும், சுரேஷ் ரெய்னாவும் நிதானமாக ஆடினர். அணியின் எண்ணிக்கை 79 ஆக இருக்கும்போது சுரேஷ் ரெய்னா 27 ரன்னில் அவுட்டானார்.



    அடுத்து கோலியுடன் எம்.எஸ்.தோனி சேர்ந்தார். கோலி 38 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்துள்ளது. தோனி 32 ரன்களும், பாண்ட்யா 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இங்கிலாந்து அணி சார்பில் ஜேக் பால், பிளங்கட், அடில் ரஷித், டேவிட் வில்லி ஆகியோர் ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 149 ரன்களை இலக்காக கொண்டு இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. #ENGvIND #EnglandvIndia
    ×