search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sandeep nanduri"

    • சென்னை தீவுத்திடலில் 47-வது இந்திய சுற்றுலா பொருட்காட்சி நடந்து வருகிறது.
    • இந்த கண்காட்சி 70 நாட்கள் நடைபெற உள்ளது.

    சென்னை :

    சுற்றுலாத்துறை இயக்குனரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனருமான சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் பல்வேறு திட்டங்களின் செயல் மாதிரிகளுடன் அரசு துறைகளின் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை தவிர 125 சிறிய கடைகள் மற்றும் 60 தனியார் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பல்வேறு விளையாட்டுகளுடன் கூடிய பொழுதுபோக்கு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர் ரெயில், பனிக்கட்டி உலகம். மீன் காட்சியகம், பேய் வீடு, பறவைகள் காட்சி, 3டி தியேட்டர் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்காட்சி மூலமாக நேரடியாக சுமார் 5 ஆயிரம் பேரும், மறைமுகமாக சுமார் 25 ஆயிரம் பேரும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    கடந்த 13-ந்தேதியுடன் (38 நாட்களில்) பொருட்காட்சிக்கு 4,89,669 பெரியவர்கள், 1,12,905 குழந்தைகள் என மொத்தம் 6 லட்சத்து 2 ஆயிரத்து 574 பேர் வந்துள்ளனர். 2019-ம் ஆண்டில் 38 நாட்களில் 4.76 லட்சம் பேரும், 2020-ம் ஆண்டில் 5.31 லட்சம் பேரும் பார்வையிட்டிருந்தனர்.

    இந்த பொருட்காட்சியில் சுற்றுலாத்துறை அரங்கில் மெய்நிகர் காட்சி (விர்சுவல் ரியாலிட்டி) முறையில் யுனெஸ்கோவால் உலக புராதன சின்னங்களக அறிவிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோவில், மாமல்லபுரம் கடற்கரை கோவில், கங்கை கொண்ட சோழபுரம், நீலகிரி மலை ரெயில், தாராசுரம் கோவில் ஆகியவை படமாக்கப்பட்டுள்ளன.

    மெய்நிகர் காட்சி (விர்சுவல் ரியாலிட்டி) என்ற சிறப்பு பிரத்யோக சாதனத்தின் மூலம் இந்த இடங்களின் புகைப்படங்கள் பார்வையாளர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டு வருகிறது.

    70 நாட்கள் நடைபெற உள்ள இந்த கண்காட்சிக்கு பொதுமக்கள் அதிகளவில் வருகை தந்து தமிழ்நாடு அரசின் ஆக்கப்பூர்வ பணிகளையும், மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்படும் புதிய திட்டங்கள் மற்றும் சாதனைகளை தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளோம். யாரும் போராட வேண்டாம் என தூத்துக்குடி கலெக்டர் தெரிவித்துள்ளார். #Thoothukkudicollector
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி நகரில் தமிழக அரசால் சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் சமீபத்தில்  உத்தரவிட்டது. அந்த ஆலைக்கு தேவையான மின்சாரத்தை வழங்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
     
    இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய தீர்மானித்துள்ள தமிழக அரசு இதுதொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கிடையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என தூத்துக்குடிக்கு உட்பட்ட பல பகுதிகளில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

    தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முன்பு இன்று காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என முழக்கமிட்டனர்.

    இதேபோல், ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்க கூடாது என்ற கோரிக்கையுடன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று பேரணியாக சென்றனர்.

    இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

    எனவே, பொதுமக்கள் யாரும் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார். #Thoothukkudicollector #avoidprotests #Sterliteprotests
    தமிழக அரசின் முடிவின் படி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பே இல்லை என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். #SterlitePlant #ThoothukudiCollector #SandeepNanduri
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்திய போது துப்பாக்கிசூடு நடந்தது. இதில் 13 பேர் பலியானார்கள். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. தற்போது ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ரசாயன கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகின்றன.

    இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-


    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 99 சதவீத ரசாயன கழிவுகள் வெளியேற்றப்பட்டு விட்டன. ஆலை மீண்டும் திறக்கப்படும் என்பது பொய்யான தகவல். தமிழக அரசின் முடிவின் படி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பே இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #SterlitePlant #ThoothukudiCollector #SandeepNanduri
    ×