search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sambavar vadakarai"

    • வைகாசி விசாகப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கடந்த 24-ந்தேதி கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • வைகாசி விசாக திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது.

    சாம்பவர்வடகரை:

    தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ராமசாமி கோவிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கடந்த 24-ந்தேதி கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தேரோட்டம்

    தொடர்ந்து கோவிலில் கொடிமரத்தில் கால்நாட்டு தல் நிகழ்ச்சியும், பின்னர் தேரில் கால்நாட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மதியம் அன்னதானம், இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. வைகாசி விசாக திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது. 10-ம் நாளான நேற்று தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.

    முன்னதாக நேற்று காலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் மதியம் 2 மணிக்கு சுவாமி தேருக்கு புறப்பட்டு வருதலும், செண்டை மேளம் முழங்க 3 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தொடர்ந்து இரவு சிறப்பு பூஜைகளும், 9 மணிக்கு இன்னிசை கச்சேரியும், அதனைத் தொடர்ந்து வில்லிசையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருவிழா விற்கான ஏற்பாடுகளை இந்து நாடார் உறவின்முறை கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ரவிசங்கர் தலைமை தாங்கினார்.
    • விழாவில் சிவபத்மநாபன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    சாம்பவர் வடகரை:

    சாம்பவர்வடகரையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ரவிசங்கர் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் முத்து வரவேற்று பேசினார். பேரூராட்சி தலைவர் சீதாலட்சுமி முத்து தொகுத்து வழங்கினார். பொதுக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகசாமி, சாமிதுரை, நாலாயிரம் பாப்பா, சண்முகவேல், ராமச்சந்திரன், விஜயகுமார், செல்வின் அப்பாதுரை, பட்டு முத்து, சுடலைமுத்து ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.

    இதில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். தொடர்ந்து மாநில பேச்சாளர் சரத் பாலா சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் திவான் ஒலி, ஒன்றிய கவுன்சிலர் வீராணம் சேக் முகமது, சுரண்டை நகர செயலாளர் ஜெயபாலன், வெங்கடேசன், கென்னடி, கலா, பண்டாரம், வெள்ளத்துரை, அருணா சந்திரன், முத்துக்குமார், ஞான முருகன், அணைந்த பெருமாள், ஸ்டீபன் சத்யராஜ், முல்லை கண்ணன், பாலசுப்பிரமணியன், சேர்ந்தமரம் முருகன், டான் கணேசன், ரத்னசாமி, வெள்ளத்துரை பாண்டியன், அருணா, ஞானசீலன், வடகரை ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மார்க்கசிஸ் நன்றி கூறினார்.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேரூராட்சி மன்ற தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்புகள்
    • பேரூராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி முத்து வழங்கினார்.

    சாம்பவர் வடகரை:

    சாம்பவர்வடகரை பேரூராட்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேரூராட்சி மன்ற தூய்மை பணியாளர்கள், மஸ்தூர் பணியாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்புகளை பேரூராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி முத்து வழங்கினார்.

    பேரூராட்சி மன்ற செயலாளார் காயத்ரி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் நாலாயிரம் என்ற பாப்பா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பழனிக்குமார், சுடலை முத்து, முத்துலட்சுமி, பட்டு மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×