சாம்பவர் வடகரையில் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ரவிசங்கர் தலைமை தாங்கினார்.விழாவில் சிவபத்மநாபன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனுக்கு மாலை அணிவிக்கப்பட்ட காட்சி.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனுக்கு மாலை அணிவிக்கப்பட்ட காட்சி.
Published on

சாம்பவர் வடகரை:

சாம்பவர்வடகரையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ரவிசங்கர் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் முத்து வரவேற்று பேசினார். பேரூராட்சி தலைவர் சீதாலட்சுமி முத்து தொகுத்து வழங்கினார். பொதுக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகசாமி, சாமிதுரை, நாலாயிரம் பாப்பா, சண்முகவேல், ராமச்சந்திரன், விஜயகுமார், செல்வின் அப்பாதுரை, பட்டு முத்து, சுடலைமுத்து ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.

இதில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். தொடர்ந்து மாநில பேச்சாளர் சரத் பாலா சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் திவான் ஒலி, ஒன்றிய கவுன்சிலர் வீராணம் சேக் முகமது, சுரண்டை நகர செயலாளர் ஜெயபாலன், வெங்கடேசன், கென்னடி, கலா, பண்டாரம், வெள்ளத்துரை, அருணா சந்திரன், முத்துக்குமார், ஞான முருகன், அணைந்த பெருமாள், ஸ்டீபன் சத்யராஜ், முல்லை கண்ணன், பாலசுப்பிரமணியன், சேர்ந்தமரம் முருகன், டான் கணேசன், ரத்னசாமி, வெள்ளத்துரை பாண்டியன், அருணா, ஞானசீலன், வடகரை ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மார்க்கசிஸ் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com