search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rural women"

    • நயினார்பத்து ஊராட்சியில் ரூ.9.77 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேசன் கடை கட்டிடம், ரூ.14.31 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.
    • நிகழ்ச்சிக்கு தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே ராமநாதபுரத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு, வாகைவிளையில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ள ளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டிகள், நயினார்பத்து ஊராட்சியில் ரூ.9.77 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேசன் கடை கட்டிடம், ரூ.14.31 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.

    இத்திட்டப்பணிகளை கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்ம சக்தி, தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செய லர் உமரிசங்கர், திருச் செந்தூர் ஆர்.டி.ஓ. குரு சந்திரன், தாசில்தார் வாமனன், உடன்குடி ஊரா ட்சி ஓன்றியக்குழு தலைவர் பாலசிங், துணைத்தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலர் க.இளங்கோ, உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ், உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அஸ்ஸாப் அலி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆதி லிங்கம், அமுதவல்லி, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் தங்கலட்சுமி, செந்தில், உடன்குடி பேரூ ராட்சி முன்னாள் உறுப்பி னர்கள் சலீம், அன்வர் சலீம் உட்பட திரளான ஊர் மக்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து மக்கள் களம் நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்று கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    தமிழக அரசு கிராமப்புற பெண்களின் பொருளாதார

    முன்னேற்றத்திற்கு ஏராளமான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கிராமங்களில் அடிப்படை கட்டமைப்புகள் நன்கு இருந்தால் தான் முன்னேற்றம் ஏற்படும். கிராமப்புற பெண்களின் முன்னேற்றமே அந்த நாட்டை உயர்த்தும்.

    அதற்கேற்ப பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு உடனடியாக பஸ் வசதி செய்து தரப்படும். பெண் களின் உரிமைத் தொகை தகுதி வாய்ந்த அனை வருக்கும் வருகிற செப் டம்பர் 15-ந்தேதி முதல் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் சுமார் ஆயிர த்திற்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள், இல வச வீட்டு மனை பட்டாக்கள், தையல் எந்தி ரங்கள் ஆகியவற்றை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

    • நடப்பு ஆண்டு வரை சொத்துவரி, குடிநீர் கட்டணத்தை முறையாக செலுத்தியிருக்க வேண்டும்.
    • 100 நாள் திட்டத்தின் மூலமாக, ஆதி திராவிடர் காலனியில் உள்ள ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்பெறுகின்றனர்.

    திருப்பூர்,

    வேலை உறுதி திட்டத்தில் நடப்பு ஆண்டில்,281 ரூபாய் தினக்கூலி வழங்கப்படுகிறது. 100 நாள் திட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வேலை உறுதி திட்ட பணியாளர்எவ்வகையிலும் வரி நிலுவை வைத்திருக்க கூடாது.

    நடப்பு ஆண்டு வரை சொத்துவரி, குடிநீர் கட்டணத்தை முறையாக செலுத்தியிருக்க வேண்டும். அதுமட்டுமல்ல சமூக பாதுகாப்பு திட்டத்தில் ஓய்வூதிய உதவி பெறுபவராகவும் இருக்க கூடாது என திடீர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.வரி நிலுவை இருக்க கூடாது என்ற விதிமுறை நியாயமானதாக இருந்தாலும், ஓய்வூதிய உதவி பெறுவோருக்கு பணி வாய்ப்பை மறுக்க கூடாதென ஏழை, எளிய மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து திருப்பூர் மாவட்ட வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் சிலர் கூறியதாவது:-

    100 நாள் திட்டத்தின் மூலமாக, ஆதி திராவிடர் காலனியில் உள்ள ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்பெறுகின்றனர்.வீட்டுவரி, குடிநீர் கட்டணம் நிலுவை இருக்க கூடாது என்கின்றனர். அவர்களுக்கு வேலை வழங்கி, சம்பளத்திலேயே பிடித்தம் செய்து கட்டலாம்.மாறாக பணி வாய்ப்பை பறிக்க கூடாது. விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய உதவி பெற்றாலும் 100 நாள் திட்டத்தில் உழைப்புக்கு சம்பளம் பெறும் வாய்ப்பை மறுக்க கூடாது. தேவையற்ற கட்டுப்பாடுகளை நீக்க தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×