என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rope factory"

    • கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
    • தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறிய தால் அவர்கள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு கோபாலபுரத்தில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் சாலையில் பார்வதி ஓடை அருகே எஸ்.ராமச்சந்திர புரத்தைச் சேர்ந்த சேதுபதி என்பவர் தென்னை நாரில் இருந்து கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

    இந்த கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக தொழிற்சாலையில் இருந்து தென்னை நார் கழிவுகளில் தீ பரவி அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த கழிவுகளில் தீப்பற்றியது.

    அந்த தொழிற்சாலையில் 10-கும் மேற்பட்ட வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர். தீ பரவியதை உணர்ந்த தொழிலாளிகள் அலறி அடித்து ஓடி வந்து அந்த வழியாக சென்றவர்களிடம் கூறினர். இதுகுறித்து வத்திராயிருப்பு தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வத்திராயிருப்பு தீயணைப்புதுறையினர் தொழிற்சாலையில் பற்றிய தீயை ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வத்திராயிருப்பு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தீப்பிடிக்க தொடங்கியதும் தொழிற்சாலையில் இருந்த வடமாநில தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறிய தால் அவர்கள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

    • தீ விபத்து ஏற்பட்டதால் குடோனில் வைக்கப்பட்டிருந்த கயிறு மற்றும் நார் பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.
    • கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் அடிக்கடி தீ விபத்து நடப்பதால் இதன் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆத்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் மல்லையாபுரத்தில் கணேசன் என்பவருக்கு சொந்தமான கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஏராளமான ஆண், பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்த ஆலையில் இன்று திடீரென தீப்பிடித்தது. குடோனில் வைக்கப்பட்டிருந்த கயிறு மற்றும் நார் பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். இருந்தபோதும் ஆலையில் இருந்த லட்சகணக்கான பொருட்கள் எரிந்து சாம்பாலானது.

    இப்பகுதியில் உள்ள கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் அடிக்கடி தீ விபத்து நடப்பதால் இதன் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அக்கரைப்பட்டி ஊராட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை புகார் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன்காரணமாகவே அடிக்கடி தீ விபத்துகள் நடந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    ×