என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழிற்சாலையில் பற்றி எரியும் தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்.
கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து
- கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
- தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறிய தால் அவர்கள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு கோபாலபுரத்தில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் சாலையில் பார்வதி ஓடை அருகே எஸ்.ராமச்சந்திர புரத்தைச் சேர்ந்த சேதுபதி என்பவர் தென்னை நாரில் இருந்து கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
இந்த கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக தொழிற்சாலையில் இருந்து தென்னை நார் கழிவுகளில் தீ பரவி அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த கழிவுகளில் தீப்பற்றியது.
அந்த தொழிற்சாலையில் 10-கும் மேற்பட்ட வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர். தீ பரவியதை உணர்ந்த தொழிலாளிகள் அலறி அடித்து ஓடி வந்து அந்த வழியாக சென்றவர்களிடம் கூறினர். இதுகுறித்து வத்திராயிருப்பு தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வத்திராயிருப்பு தீயணைப்புதுறையினர் தொழிற்சாலையில் பற்றிய தீயை ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
மேலும் இதுகுறித்து வத்திராயிருப்பு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தீப்பிடிக்க தொடங்கியதும் தொழிற்சாலையில் இருந்த வடமாநில தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறிய தால் அவர்கள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.






