search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Robbery at home"

    • நகை, பட்டு சேலைகள் திருடிசென்றனர்
    • குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற போது கும்பல் கைவரிசை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த தணிகைபோளூர் கண்டிகையை சேர்ந்தவர் பாபு(50). இவர் பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு ஒன்றிய துணை தலைவராக உள்ளார். மேலும் தனியார் டயர் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் பாபு குடும்பத்தோடு நேற்று முன்தினம் திருப்பதி கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றிருந்தனர்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்ப கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவை உடைத்து அதிலிருந்த 4 பவுன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.11 ஆயிரம், 9 பட்டுப் புடவைகள் ஆகியவற்றை கொள்ளை யடித்து சென்றனர்.

    தரிசனம் முடிந்து பாபு இன்று அதிகாலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்ப ட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

    இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசில் பாபு புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

    கோவிலுக்கு சென்ற போது பா.ஜ.க. பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம கும்பல் கொள்ளை யடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 40 பவுன் திருடு போனதாக நாடகமாடியது அம்பலம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் கொணவட்டம் சக்திநகரை சேர்ந்தவர் என்ஜினீயர். இவர் ஆந்திரமாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

    என்ஜினீயர்

    இவரது தாயார் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் சக்தி நகரில் வசித்து வருகின்றனர். இருவரும் கடந்த 31-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வாலாஜாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.

    2 நாட்களுக்கு பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு ஆங்காங்கே பொருட்கள், துணிகள் சிதறி கிடந்தன.

    இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தனர்.இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று வீடு, பீரோக்களை பார்வையிட்டு அவருடைய மாமியார் மற்றும் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் 3 வாலிபர்கள் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் ஆரணி பகுதியை சேர்ந்த ஆகாஷ் (வயது 19),வேலூர் முள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த பிரதீப் குமார் என்கிற ரஞ்சித் (23) என தெரிய வந்தது.

    மேலும் தலைமறைவாக உள்ள சேண்பாக்கம் சூர்யா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களிடம் இருந்து ஒரு லேப்டாப் செல்போன் ஒரு டேப் மற்றும் வெள்ளி கொலுசு பறிமுதல் செய்யப்பட்டது.

    திருடப்பட்டதாக புகாரில் கூறப்பட்ட 40 பவுன் குறித்து அவர்களிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் நாங்கள் நகைகள் ஏதும் திருடவில்லை என்று தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் என்ஜினீயரை அழைத்து விசாரணை செய்தனர்.

    அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அது குறித்து போலீசார் கூறியதாவது:-

    என்ஜினீயர் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்ததை அடுத்து தனது வீட்டில் 40 பவுன் நகைகள் திருடப்பட்டதாக கூறினார். ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் திருடவில்லை என்றனர். தீவிர விசாரணையில் என்ஜினீயர் அவரது நகைகளை விற்பனை செய்து வீடு கட்டி வந்துள்ளார்.

    திருட்டு சம்பவம் நடந்த பின்னர் அக்கம் பக்கத்தினர் கூறியதன் பேரில் திருடப்பட்ட பொருளுடன் நகையும் திருடு போனதாக கூறி நாடகமாடி உள்ளது தெரியவந்தது என்று போலீசார் கூறினர்.

    • 4 பவுன் நகை, பைக் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த தேசூர் போலீசார் ஏரிக்கரை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த நபரிடம் விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த தினகரன் என்பதும் இவர் பெரணமல்லூர் தேசூர் செஞ்சி சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளில் புகுந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

    மேலும் திருத்தணி ஆற்காடு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் தினகரன் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து தேசூர் போலீசார் தினகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் அவரிடம் இருந்த 4 பவுன் நகை, வெள்ளி கொலுசுகள் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×