search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடுகளில் புகுந்து கொள்ளையடித்த வாலிபர் கைது
    X

    வீடுகளில் புகுந்து கொள்ளையடித்த வாலிபர் கைது

    • 4 பவுன் நகை, பைக் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த தேசூர் போலீசார் ஏரிக்கரை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த நபரிடம் விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த தினகரன் என்பதும் இவர் பெரணமல்லூர் தேசூர் செஞ்சி சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளில் புகுந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

    மேலும் திருத்தணி ஆற்காடு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் தினகரன் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து தேசூர் போலீசார் தினகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் அவரிடம் இருந்த 4 பவுன் நகை, வெள்ளி கொலுசுகள் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×