search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    என்ஜினீயர் வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் கைது
    X

    என்ஜினீயர் வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் கைது

    • 40 பவுன் திருடு போனதாக நாடகமாடியது அம்பலம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் கொணவட்டம் சக்திநகரை சேர்ந்தவர் என்ஜினீயர். இவர் ஆந்திரமாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

    என்ஜினீயர்

    இவரது தாயார் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் சக்தி நகரில் வசித்து வருகின்றனர். இருவரும் கடந்த 31-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வாலாஜாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.

    2 நாட்களுக்கு பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு ஆங்காங்கே பொருட்கள், துணிகள் சிதறி கிடந்தன.

    இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தனர்.இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று வீடு, பீரோக்களை பார்வையிட்டு அவருடைய மாமியார் மற்றும் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் 3 வாலிபர்கள் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் ஆரணி பகுதியை சேர்ந்த ஆகாஷ் (வயது 19),வேலூர் முள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த பிரதீப் குமார் என்கிற ரஞ்சித் (23) என தெரிய வந்தது.

    மேலும் தலைமறைவாக உள்ள சேண்பாக்கம் சூர்யா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களிடம் இருந்து ஒரு லேப்டாப் செல்போன் ஒரு டேப் மற்றும் வெள்ளி கொலுசு பறிமுதல் செய்யப்பட்டது.

    திருடப்பட்டதாக புகாரில் கூறப்பட்ட 40 பவுன் குறித்து அவர்களிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் நாங்கள் நகைகள் ஏதும் திருடவில்லை என்று தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் என்ஜினீயரை அழைத்து விசாரணை செய்தனர்.

    அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அது குறித்து போலீசார் கூறியதாவது:-

    என்ஜினீயர் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்ததை அடுத்து தனது வீட்டில் 40 பவுன் நகைகள் திருடப்பட்டதாக கூறினார். ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் திருடவில்லை என்றனர். தீவிர விசாரணையில் என்ஜினீயர் அவரது நகைகளை விற்பனை செய்து வீடு கட்டி வந்துள்ளார்.

    திருட்டு சம்பவம் நடந்த பின்னர் அக்கம் பக்கத்தினர் கூறியதன் பேரில் திருடப்பட்ட பொருளுடன் நகையும் திருடு போனதாக கூறி நாடகமாடி உள்ளது தெரியவந்தது என்று போலீசார் கூறினர்.

    Next Story
    ×