search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் கொள்ளை
    X

    கொள்ளை போன பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

    பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் கொள்ளை

    • நகை, பட்டு சேலைகள் திருடிசென்றனர்
    • குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற போது கும்பல் கைவரிசை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த தணிகைபோளூர் கண்டிகையை சேர்ந்தவர் பாபு(50). இவர் பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு ஒன்றிய துணை தலைவராக உள்ளார். மேலும் தனியார் டயர் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் பாபு குடும்பத்தோடு நேற்று முன்தினம் திருப்பதி கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றிருந்தனர்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்ப கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவை உடைத்து அதிலிருந்த 4 பவுன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.11 ஆயிரம், 9 பட்டுப் புடவைகள் ஆகியவற்றை கொள்ளை யடித்து சென்றனர்.

    தரிசனம் முடிந்து பாபு இன்று அதிகாலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்ப ட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

    இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசில் பாபு புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

    கோவிலுக்கு சென்ற போது பா.ஜ.க. பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம கும்பல் கொள்ளை யடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×