என் மலர்
நீங்கள் தேடியது "relief team"
- கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிகனமழை முதல் மிக அதிகனமழைக்கான ரெட் அலெர்ட்.
- கண்காணிப்பு அலுவலர்களான மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மாவட்டங்களுக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ந்தேதி வாக்கில் உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளத கூறப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிகனமழை முதல் மிக அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளதால், மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னேற்பாடுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் பேரிடர் மேலாண்மை துறை ஆலோசனை நடத்தியுள்ளது. அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியால், கோவை, நீலகிரிக்கு 3 மாநில பேரிடர் மீட்பு படையும், ஊட்டி, வால்பாறைக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்பு படையும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
தீயணைப்புதுறை, மின்சாரம், நெடுஞ்சாலைத்துறை என அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கண்காணிப்பு அலுவலர்களான மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மாவட்டங்களுக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
திருச்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தின் வளம் கொழிந்த பகுதியான காவிரி பாசன பகுதி கஜா புயலால் நாசமாகியுள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகள், நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. இதனால் 51 பேர் பலியாகியுள்ளனர். காவிரி டெல்டா பாலைவனமாக மாறிவிடக்கூடாது என தொடர்ந்து போராடி வருகிறோம். தற்போது புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் மாவட்ட கலெக்டர் மற்றும் நிர்வாகம், மருத்துவர்கள், மின்வாரிய ஊழியர்கள் என அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ம.தி.மு.க. சார்பில் வாழ்த்துக்கள்.
தமிழக அரசு ஆயிரம் கோடி நிவாரணம் அளித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. புயல் நிவாரண பணி, மீட்பு பணிகளில் ஈடுபட அனைத்து கட்சி உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும். அப்போது தான் மக்களின் எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். புயல் முன்னேற்பாடுகளில் இதைவிட எந்த சர்க்காரும் சிறந்து செயல்பட முடியாது. அதை தாண்டி ஏற்பட்ட சேதங்கள் வேதனையளிக்கிறது. மக்கள் தண்ணீர், மருந்துகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர். கேரளாவில் வெள்ளம் ஏற்பட்ட போது ஆளும் கட்சி, எதிர்கட்சி இணைந்து செயல்பட்டது. அறிவிக்கப்பட்ட நிவாரண உதவிகள் உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடைய வேண்டும்.
எதிர்க்கட்சி தலைவர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் போது எதிர்ப்பு வருகிறது. அதனை சமாளிக்கும் வகையில் அனைத்து கட்சி உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும்.

மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க கோரி நவம்பர் 24ந்தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தி.மு.க.வின் தலைமையில் ம.தி.மு.க. தொடர்ந்து செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #MDMK #Vaiko #GajaCyclone






