search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pudukkottai robbery"

    • கோவில் கட்ட சேகரிக்கப்பட்ட பணம் ரூ.11 லட்சத்தை அரிமளம் வீட்டில் உள்ள பெட்டியில் வைரவன் வைத்துள்ளார்.
    • கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்மநபர்கள் விட்டு சென்ற தடயங்கள் சேகரித்தனர்.

    புதுக்கோட்டை:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் வைரவன். இவருக்கு புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் மீனாட்சி புரம் வீதியில் சொந்தமான 100 ஆண்டு பழைமை வாய்ந்த வீடு ஒன்று உள்ளது.

    அவ்வப்போது அரிமளத்தில் உள்ள வீட்டிற்கு குடும்பத்துடன் செல்வதை வைரவன் வழக்கமாக வைத்துள்ளார்.

    அரிமளம் அருகே இசுகுப்பட்டி கிராமத்தில் வைரவன் குடும்பத்தாருக்கு சொந்தமான இடத்தில் அய்யனார் கோவில் கட்டுவதென்று வைரவன் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

    அதற்காக பணம் சேகரிக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட பணம் ரூ.11 லட்சத்தை அரிமளம் வீட்டில் உள்ள பெட்டியில் வைரவன் வைத்துள்ளார்.

    இந்த நிலையில் வழக்கம் போல் வைரவன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது வீடு முழுவதும் பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. வீட்டில் அறையில் பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.11 லட்சம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

    இச்சம்பவம் தொடர்பாக அரிமளம் போலீசில் வைரவன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்மநபர்கள் விட்டு சென்ற தடயங்கள் சேகரித்தனர்.

    தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து போலீசார் மர்ம நபர்களை வலை வீசி தேடிவருகின்றனர்.

    • விடிய விடிய தேடி அலைந்தும் கொள்ளையன் சிக்கவில்லை.
    • வழக்கு பதிவு செய்து உள்ள போலீசார் கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரவன்பட்டியை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 40). விவசாயியான இவர் வழக்கம் போல தனது தாயுடன் இரவு உணவு உண்ட பின்பு, தூங்கி உள்ளார். வீட்டு வேலையை முடித்து கொண்டு தாய் அமராவதியும் படுத்து தூங்கி உள்ளார்.

    இருவரும் நன்றாக உறங்கி கொண்டிருந்த, நள்ளிரவு நேரத்தில் பின்பக்க கதவை உடைக்காமல் லாவகமாக திறந்த மர்மநபர், வீட்டுக்குள் புகுந்து உள்ளான். பின்னர் பீரோவை சத்தமில்லாம் உடைத்து திறந்து அதில் இருந்த 19 நகையை திருடி உள்ளான். திருடிய நகைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய போது கண்ணதாசனின் தாய், கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி செயின் திருடனின் கண்ணை உறுத்தி உள்ளது.

    இதனால் மீண்டும் கை அரிப்பு எடுத்தவனாய் தூங்கிக் கொண்டிருந்த கண்ணதாசனின் தாய் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தாலி செயினை பறிக்க முயற்சித்துள்ளார். இதனை உணர்ந்த கண்ணதாசனின் தாய், விழித்தெழுந்து திருடனை பார்த்து சத்தமிட்டுள்ளார்.

    அதிர்ச்சி அடைந்த மர்மநபர் பின்வாசல் வழியாக தப்பி சென்று உள்ளான். சத்தம் கேட்டு விழித்தெழுந்த கண்ணதாசனும், ஓடி வந்த அக்கம் பக்கத்தினரும், நான்கு புறமும் திருடனை தேடி அலைந்து உள்ளனர். மேலும் அக்கிராமத்து இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் கிராமத்தில் இருந்து செல்லும் அனைத்து சாலைகளிலும் தேடி அலைந்துள்ளனர்.

    விடிய விடிய தேடி அலைந்தும் கொள்ளையன் சிக்கவில்லை. எனவே இது குறித்து கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தினர்.

    வழக்கு பதிவு செய்து உள்ள போலீசார் கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ஆளில்லாத வீட்டில் கொள்ளை சம்பவம் நடப்பது வழக்கமாக உள்ள இந்நிலையில் தற்போது ஆள் இருக்கும்போதே கொள்ளை சம்பவம் நடந்தேறியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுக்கோட்டை அருகே நகை வியாபாரியை காரில் கட்டிப்போட்டு விட்டு ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    புதுக்கோட்டை:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 40), பழைய நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று காலை புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் வியாபாரத்திற்கு வந்த அவர், கே.புதுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் பொது மக்களிடம் இருந்து 92 பவுன் பழைய நகைகளை வாங்கினார். மேலும் பழைய நகைகளை விற்பனை செய்ததன் மூலம் ரூ.1 லட்சத்து 82 ஆயிரம் பணம் அவருக்கு கிடைத்தது.

    வியாபாரம் முடிந்ததும் நேற்றிரவு காரைக்குடிக்கு காரில் புறப்பட்டார். காரை அவரே ஓட்டிச்சென்றார். புதுக்கோட்டை கே.புதுப்பட்டி அருகே பாம்பாற்று பாலம் பகுதியில் செல்லும் போது திடீரென 4 பேர் கொண்ட கும்பல் , விக்னேஷின் காரை வழிமறித்தது. அதிர்ச்சியடைந்த அவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க முயன்றார்.

    அதற்குள் அந்த கும்பல் விக்னேசை சுற்றி வளைத்து பிடித்ததோடு, அவர் வைத்திருந்த நகை-பணத்தை பறிக்க முயன்றனர். அவர் கொடுக்க மறுத்து கூச்சலிடவே, 4 பேரும் சேர்ந்து விக்னேஷின் வாயை துணியால் பொத்தினர்.

    மேலும் கை-கால்களை கயிற்றால் கட்டி காருக்குள் போட்டு விட்டு, விக்னேஷ் வைத்திருந்த 92 பவுன் நகை மற்றும் ரூ.1.82 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். கொள்ளை போன நகை- பணத்தின் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும்.

    இதனிடையே அந்த வழியாக வந்த பொதுமக்கள் நடுரோட்டில் கார் தனியாக நிற்கவே, அதற்குள் யார் இருக்கிறார் என்று பார்த்த போது, விக்னேஷ் கட்டி போடப்பட்ட நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரை பொதுமக்கள் மீட்டதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து விக்னேஷ் கே. புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் எங்கு தேடியும் மர்மநபர்கள் சிக்கவில்லை. மேலும் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வாகன சோதனையை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டது. ஆனால் வாகன சோதனையில் சந்தேகப்படும்படியான நபர்கள் சிக்கவில்லை.

    கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விக்னேஷிற்கு தெரிந்த நபர்களே இந்த கைவரிசையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    நேற்று புதுக்கோட்டைக்கு நகை வியாபாரம் செய்ய வந்ததை நோட்டமிட்ட நபர்கள், அவர் ஊருக்கு புறப்பட்டு செல்வதை அறிந்து, நகையை பறித்து சென்றிருக்கலாம் என தெரிகிறது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×