என் மலர்
நீங்கள் தேடியது "Priyanka Gandh"
- அவரது பயணம் சிறப்பாக அமைந்ததை குறிக்கும் வகையில் 3 புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.
- பிரியங்கா காந்தியை டுவிட்டரில் 50 லட்சம் பேர்களுக்கு மேல் பின் தொடர்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி (51), மத்திய பிரதேச மாநில நகரான குவாலியருக்கு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தார். பின்னர், விமான பணிக்குழுவினரை பாராட்டி சிறப்பான வரவேற்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை செய்துள்ளார்.
குவாலியருக்கான அவரது பயணம் சிறப்பாக அமைந்ததை குறிக்கும் வகையில் 3 புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். இரண்டு விமான பணிப்பெண்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
விமான பணிப்பெண்கள் அவருக்கு சாக்லேட் சிப் குக்கீஸ் மற்றும் ஓட்ஸ், உலர்ந்த திராட்சை, தேங்காய் கொண்டு செய்யப்படும் கிரானோலா பார்களையும் வழங்கினர்.
அவர்கள் வழங்கிய பரிசுப்பெட்டியில் "அன்புள்ள திருமதி. காந்தி, இண்டிகோவில் பயணித்ததற்கு நன்றி" என எழுதப்பட்டிருந்தது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரியங்கா வெளியிட்டுள்ள பதிவில் "இனிமையான இண்டிகோ பெண்களுக்கு என் நன்றி. இண்டிகோ விமான பணிக்குழுவினர் திறமையானவர்கள், பழகுவதற்கு சுகமானவர்கள் எனும் எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு" என தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு வைரலாகியுள்ளது. பிரியங்கா சமூக வலைதளங்களில் மிகுந்த துடிப்புடன் பதிவுகளிட்டு வருபவர். டுவிட்டரில் 50 லட்சம் பேர்களுக்கு மேல் அவரை பின் தொடர்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் 10 லட்சம் பேர் அவரை பின் தொடர்கிறார்கள்.
- மத்தியில் புதிய அரசு அமையப்பட்ட பிறகு 14 பயங்கரவாத தாக்குதல்கள் கடந்த 49 நாட்களில் நடைபெற்றுள்ளன.
- இதில் 15 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். இது நாட்டுக்கு மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் கடந்த நான்கு வாரங்களாக பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு படையினர் உள்ளூர் போலீசார் உடன் இணைந்து பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டு வருகிறார்கள்.
இன்று ஜம்மு-காஷ்மீர் குப்வாரா மாவட்டத்திலுள்ள கமாகரி செக்டாரில் பாகிஸ்தான் எல்லை அதிரடி குழு நடத்திய தாக்குதலில் இந்திய பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். 4 வீரர்கள் காயமடைந்துள்ளனர். பாதுகாப்புப்படை வீரர்களின் பதில் தாக்குதலில் பாகிஸ்தான் ஊடுருவல்காரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
இந்த நிலையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு 49 நாட்களில் 14 பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளன. இதில் 15 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையில் ஒரு வீரர் வீர மரணம் அடைந்தார். நான்கு வீரர்கள் காயமடைந்தனர் என்ற செய்தி மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது. அவர்கள் ஆன்மா சாந்தி அடையட்டும். அவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன்.
மத்தியில் புதிய அரசு அமையப்பட்ட பிறகு 14 பயங்கரவாத தாக்குதல்கள் கடந்த 49 நாட்களில் நடைபெற்றுள்ளன. இதில் 15 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். இது நாட்டுக்கு மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
- பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தும் கொடூர தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கைப்பை அணிந்திருந்தார் பிரியங்கா.
- 1984-ல் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை சுட்டிக்காட்டும் வகையில் பா.ஜ.க. எம்.பி. வழங்கினார்.
காங்கிரஸ் கட்சி மக்களவை எம்.பி.யான பிரியங்கா காந்தி நேற்று முன்தினம் பாலஸ்தீனம் என எழுதப்பட்டிருந்த கைப்பை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்திருந்திருந்தார். பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் கொடூரமான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதை அணிந்து வந்திருந்தார்.
நேற்று வங்கதேசத்தில் மைனாரிட்டிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வங்கதேசத்தில் மைானரிட்டிகள் தாக்குப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் அடங்கிய கைப்பை அணிந்து வந்திருந்தார். அவருடன் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் பலரும் கைப்பை அணிந்து வந்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று 1984-ம் ஆண்டு நடைபெற்ற சீக்சியர்களுக்கு எதிரான வன்முறையை குறிக்கும் வகையில் ரத்தம் சொட்டும் வகையில் 1984 என எழுதப்பட்டிருந்த கைப்பையை பிரியங்கா காந்திக்கு ஆத்திரமூட்டும் வகையில் பா.ஜ.க. எம்.பி. அபரஜிதா சாரங்கி வழங்கினார்.
அந்த பையை வாங்கிய பிரியங்கா காந்தி அதில் என்ன எழுத்தியிருக்கிறது என்று பார்க்காமல் சென்றார்.
கைப்பை வழங்கியது தொடர்பாக பா.ஜ.க. எம்.பி. அபரஜிதா சாரங்கி கூறுகையில் "இந்திரா காந்தி படுகொலையை தொடர்ந்து 1984-ல் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையில் காங்கிரஸ் வரலாற்று தவறை செய்துள்ளதை சுட்டிக்காட்டும் வகையில் அந்த பையில் கிராபிக்ஸ் செய்யப்பட்டிருந்தது. இந்த வன்முறை நாடு தழுவிய அளவில் வன்முறையாக வெடித்தது. இதில் அரசு தகவலின்படி டெல்லியில் 2800 பேரும், நாடு முழுவதும் 3350 பேர் உயிரழந்தனர்.
1984-ம் ஆண்டு நடந்த அட்டூழியங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவது மிகவும் முக்கியமானது. காங்கிரசின் கடந்த கால நடவடிக்கையை மக்கள் அறிந்திருக்க வேண்டும்.
இவ்வாறு அபரஜிதா சாரங்கி தெரிவித்துள்ளார்.
- கேரளா கண்ணூர் சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று மதியம் வருகிறார்.
- குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி அருகே உள்ள பஞ்சரக் கொல்லி பகுதியை சேர்ந்த வனக்காவலர் அச்சப்பன் என்பவரின் மனைவி ராதா கடந்த 24-ந்தேதி காபி பறித்துக் கொண்டிருந்த போது புலி தாக்கி கொல்லப்பட்டார்.
அந்த புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வனக்குழுவை சேர்ந்த ஜெயசூர்யாவும் புலியின் தாக்குதலுக்கு உள்ளானார். இதையடுத்து அந்த புலி ஆட்கொல்லி புலி என்று அறிவிக்கப்பட்டது. மேலும் அந்த புலியை சுட்டுப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தநிலையில் பெண்ணை கொன்ற ஆட்கொல்லி புலி, பிலாக் காவு அருகே உள்ள வனப்பகுதியில் இறந்து கிடந்தது. 7 வயது பெண் புலியான அது எப்படி இறந்தது? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் புலி தாக்கி இறந்த ராதாவின் குடும்பத்தினரை சந்திக்க வயநாடு தொகுதி எம்.பி.யான பிரியங்கா காந்தி இன்று வயநாடு வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலமாக கேரளா கண்ணூர் சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று மதியம் வருகிறார்.
பின்பு சாலை மார்க்கமாக மானந்தவாடிக்கு செல்கிறார். அங்கு அவர் புலி தாக்கி பலியான ராதாவின் வீட்டுக்கு சென்று, அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
பின்பு கல்பெட்டாவில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மதியம் நடக்கும் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்திலும் பிரியங்கா காந்தி பங்கேற்கிறார்.
அதன்பிறகு மேப்பாடியில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பிரியங்காகாந்தி பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு விமான நிலையத்துக்கு வந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.






