search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "private medical college"

    • ஐகோர்ட்டில் சி.எம்.சி. தகவல்
    • 2 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

    வேலூர்:

    வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் 40-க்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணப்படுத்தி ராக்கி செய்த வீடியோ வெளியானது.

    இது தொடர்பாக இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் 7 பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது.

    கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் பேரில் பாகாயம் போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்ட 7 மாணவர்கள் மீதும் ராக்கிங் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது சிஎம்சி தரப்பில் வக்கீல் ஆஜராகி கல்லூரியில் ராக்கிங் குறித்து புகார் வந்ததும் கல்லூரி முதல்வர் விடுதி வார்டன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் ராக்கிங்கில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக போலீசும் வழக்கு பதிவு செய்துள்ளது. மாணவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபண மானால் சட்டப்படி கல்லூ ரியில் இருந்து நீக்கப்படு வார்கள்.

    கல்லூரியின் கொள்கை விளக்க குறிப்பிலும் ராக்கிங்கை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்று குறிப்பி டப்பட்டுள்ளது. ராக்கிங் தடுப்பு சட்டங்களை கல்லூரி பின்பற்றி வருகிறது என தெரிவித்தனர்.

    இதை கேட்ட நீதிபதிகள் பெயர் பெற்ற கல்வி நிறுவனத்தில் இது போன்ற நடக்காமல் முன்கூட்டியே தடுக்க வேண்டியது யார் பொறுப்பு. கல்வி நிறுவனங்களில் ஒழுக்கம் முக்கியம்.

    ஒழுக்கம் இல்லாமல் மாணவர்கள் தங்கப்பதக்கமே பெற்றாலும் பயன் இல்லை. இது சம்பந்தமாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிஎம்சி மருத்துவக் கல்லூரிக்கு உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

    இந்த வழக்கில் போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கை 2 நாட்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

    உத்தரபிர தேசத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஒரு மருத்துவ படிப்பு சீட்டுக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. #NeetExam
    லக்னோ:

    நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கு ‘நீட்’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    இத்தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர முடியும். இதனால் குறைந்த செலவில் மருத்துவம் படிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

    ஆனால் உத்தரபிர தேசத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஒரு மருத்துவ படிப்பு சீட்டுக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

    லக்னோவில் ஒரா மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் 2018-2019 கல்வி ஆண்டுக்கான நிர்வாக ஒதுக்கீட்டில் வழங்கப்படும் மருத்துவ சீட் ஒன்றுக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

    முதல் ஆண்டு படிப்புக்கு ரூ.30 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விடுதி கட்டணமாக ஆண்டுக்கு ரூ.4 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.1 கோடியே 20 லட்சத்து 37 ஆயிரம் கட்டணமாக உள்ளது.

    இதுகுறித்து தனியார் மருத்துவ கல்லூரி மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே மருத்துவ இடம் வழங்க கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி மருத்துவ இடம் வழங்கப்படுகிறது. நிர்வாக ஒதுக்கீடு மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஒதுக்கீட்டில்தான் ரூ.1.2 கோடி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்றார்.

    இதுகுறித்து எய்ம்ஸ் டாக்டர்கள் சங்க தலைவர் ஹர்ஜித்சிங் கூறியதாவது:-

    முறைப்படுத்தப்பட்ட தனியார் மருத்துவ கல்லூரிகளால் இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேரும் தகுதி சீர்குலைக்கப்படுகிறது. பணக்காரர்கள் மட்டுமே டாக்டர்கள் ஆவார்கள் என்றால் அவர்களிடம் இருந்து சேவை மனப்பான்மையை எதிர்பார்க்க முடியாது என்றார். #NeetExam
    தனியார் சுயநிதி கல்லூரிகளில் உள்ள முதுநிலை மருத்துவ படிப்புக்கான காலி இடங்களை ‘நீட்’ மதிப்பெண் அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்புகளில் உள்ள காலி இடங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. உத்தரபிரதேச மாநில தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகள் சங்கம் சார்பில் தாக்கலான இந்த வழக்கின் விசாரணை, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், இந்து மல்கோத்ரா முன்னிலையில் நேற்று நடந்தது.

    அப்போது இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில் கூறுகையில், “2018-19 கல்வி ஆண்டில், உத்தரபிரதேச மாநிலத்தில் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்புகளில் 41.95 சதவீத இடங்கள் காலியாக இருக்கின்றன” என கூறப்பட்டது.

    மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் ஆஜராகி, “இந்த காலி இடங்களை ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பலாம், பிற மாநிலங்களும் விரும்பினால் இதையே பின்பற்றுமாறு செய்யலாம்; ஆனால் வரும் 31-ந் தேதிக்குள் மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்பட்டு விட வேண்டும்” என்று கூறினார்.

    இந்த யோசனையை நீதிபதிகள் ஏற்று உத்தரவு பிறப்பித்து, வழக்கை முடித்து வைத்தனர்.
    ×