search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "presence"

    • மூவேந்தர் முன்னேற்றக்கழகத்தினர் 2 ஆயிரம் பேர் அண்ணாமலை முன்னிலையில் இன்று பா.ஜனதா கட்சியில் இணைகிறார்கள்.
    • சி.எம்.டி.ராஜாஸ் சேதுபதி அறிக்கை கூறியிருந்தார்.

    பரமக்குடி

    மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் நிர் வாகி சி.எம்.டி.ராஜாஸ் சேதுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா–வது:-

    கால் நூற்றாண்டு காலம் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தில் அப்பழுக்கற்ற சமு–தாய பணியாற்றி காலத் தின் அருமை கருதி தமிழை–யும், தமிழினத்தையும், உலக–மெங்கும் பறைசாற்றும் பிரதமர் மோடி ஜி தலை–மையில் போலி திராவிட ஆட்சிக்கும், ஊழலுக்கும் அப்பழுக்கற்ற அரசியல் செய்யும் திருவண்ணா–மலை–யார் நாமம் கொண்ட அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' யாத்திரை மூலம் மக்களுக்கு விழிப்பு–ணர்வை ஏற்படுத்தி வருகி–றார்.

    தமிழகம் முழுவதும் வரக் கூடிய யாத்திரை பயணத் தில் பரமக்குடியில் நானும், என்னுடன் இருக்க கூடிய மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் இணைந்து பசும்பொன் தேவரின் ஆன்மிகம், தேசி–யத் தையும் தெய்வீ–கத்தையும் இரு கண்களாக கொண்ட சித்தர் வழியில் ஆன்மிக பணியும் அரசியல் பணியும் தொடங்குவதற்கு தயாராகி 2 ஆயிரம் பேருடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைகி–றேன் என்பதை என்னுடன் இருப்பவர்களுக்கும் என் இன மக்களுக்கும் நண்பர்க–ளுக்கும் தெரிவித்து கொள் கிறேன்.

    இவ்வாறு அவர் தெரி–வித்துள்ளார்.

    • கூட்டத்திற்கு வட்டார தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார்.
    • மாநில செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மதியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார கிளையின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

    கூட்டத்திற்கு வட்டார தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார் . கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மதியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் முருகானந்தம் வரவேற்றார்கூட்டத்தில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில்வருகிற 20ம் தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அதிக அளவில் கலந்து கொள்வது

    நகராட்சி, ஊராட்சி, ஒன்றிய பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த ஓராண்டாக ஊதியம் வழங்கப்படவில்லை. உடன் வழங்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக அரசு கொண்டு வந்துள்ள காலை சிற்றுண்டி திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் பொருளாளர் வீரசேகரன் நன்றி கூறினார்.

    • வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு நடந்தது.
    • முதல் மற்றும் 2-ம்கட்ட சரிபாக்கும் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தற செயல் நேரடி தேர்தல் - 2022 தொடர்பாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் மற்றும் 2-ம்கட்ட நிகழ்வு கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் கலெக்டர் பேசியதாவது:-

    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுரையின்படி, நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தற்செயல் நேரடித் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மாவட்ட அளவில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்காலிக ஒதுக்கீடு செய்வதற்கான முதல் மற்றும் 2-ம்கட்ட சரிபாக்கும் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்திற்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 20 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 40 வாக்குப்பதிவு எந்திரங்களின் சரிபார்க்கும் பணிகள் கடந்த 28.6.2022 அன்று முடிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் நிலையில் உள்ளது.

    தற்சமயம் இளையான்குடி வார்டு 13-ல் நகர்ப்புற உள்ளாட்சி தற்செயல் நேரடித்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான ஒரு வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஒதுக்கீடு செய்வதற்கென அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப்பிரமுகர்கள், போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் மற்றும் இளையான்குடி பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் முன்னிலையில், இணையதளம் வாயிலாக முதல் மற்றும் 2-ம் கட்ட பணிகள் நடந்தது.

    இதில், இளையான்குடி பேரூராட்சிக்கு 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வீரராகவன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ராஜா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப்பிரமுகர்கள், வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×