search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம்
    X

    தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம் நடந்தது

    தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம்

    • கூட்டத்திற்கு வட்டார தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார்.
    • மாநில செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மதியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார கிளையின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

    கூட்டத்திற்கு வட்டார தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார் . கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மதியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் முருகானந்தம் வரவேற்றார்கூட்டத்தில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில்வருகிற 20ம் தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அதிக அளவில் கலந்து கொள்வது

    நகராட்சி, ஊராட்சி, ஒன்றிய பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த ஓராண்டாக ஊதியம் வழங்கப்படவில்லை. உடன் வழங்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக அரசு கொண்டு வந்துள்ள காலை சிற்றுண்டி திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் பொருளாளர் வீரசேகரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×