search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "praveen togadia"

    • இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும்
    • நமது நாட்டின் பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் வீடுகளைப் பெற வேண்டும்.

    அமேதி :

    ராஷ்டிரிய இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா, உத்தரபிரதேச மாநிலம், அமேதி பகுதியில் உள்ள புரேராம்தீன் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அயோத்தியில் ராமர் கோவில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் வந்திருக்க வேண்டிய ராமராஜ்யத்தைத்தான் எங்கும் பார்க்க முடியவில்லை.

    நமது நாட்டின் பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் வீடுகளைப் பெற வேண்டும், அவர்களின் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும், இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

    நமது நாடு வளம்பெற, அனைத்து இந்துக்களும் இழந்த வளத்தை மீட்டெடுக்க, அனைவரும் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ள வி.ஹெச்.பி. முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா, பாராளுமன்ற தேர்தலில் உ.பி.யில் போட்டியிடவுள்ள 16 தொகுதிகளை இன்று அறிவித்தார். #LSpolls #PravinTogadia #HinduSthanNirmanDal
    லக்னோ:

    வி.ஹெச்.பி. முன்னாள் தலைவராக பதவி வகித்தவர் பிரவீன் தொகாடியா. அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீரவேண்டும் என பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தவர்.

    இதற்கிடையே, பிரவீன் தொகாடியா புதிய அரசியல் கட்சியை டெல்லியில் கடந்த மாதம் தொடங்கினார். தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் தொகாடியா இந்துஸ்தான் நிர்மாண் தளம் என்ற புதிய அரசியல் கட்சியை அறிவித்தார்.
     
    இந்நிலையில், புதிய அரசியல் கட்சி தொடங்கிய பிரவீன் தொகாடியா, பாராளுமன்ற தேர்தலில் உ.பி.யில் போட்டியிடவுள்ள 16 தொகுதிகளை இன்று அறிவித்தார். 

    இதுதொடர்பாக பிரவீன் தொகாடியா கூறுகையில், சாண்டவ்லி, அலிகார், கைரானா, பெரோசாபாத், பெரெய்லி, லக்மிபூர் கெரி, உன்னாவ், ஜான்சி, ஹமீர்பூர், பிரதாப்கர், பஸ்தி, லால்கஞ்ச், ஜான்பூர், படோனி மற்றும் சாலம்பூர் உள்ளிட்ட 16 தொகுதிகளில் போட்டியிட உள்ளோம். மேலும், குஜராத் மாநிலத்தின் 9 தொகுதிகளிலும், ஒடிஷா மாநிலத்தின் 5 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளோம் என தெரிவித்துள்ளார். #LSpolls #PravinTogadia #HinduSthanNirmanDal
    அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தவறிவிட்ட மத்திய அரசுக்கு எதிராக லக்னோவில் இருந்து அக்டோபர் 21-ம் தேதி முதல் பாதயாத்திரை தொடங்குவதாக பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார். #ChaloAyodhya #praveenTogadia
    ஐதராபாத்:

    விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரவீன் தொகாடியா அந்தர்ராஷ்டிரிய ஹிந்து பரிஷத் என்னும் புதிய அமைப்பை தொடங்கி அந்த அமைப்பின் தலைவராக பொறுப்பேற்று வருகிறார்.

    இந்நிலையில், தெலுங்கானா மாநில தலைநகரான ஐதராபாத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரவீன் தொகாடியா, 2014-பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவோம் என மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மத்தியில் ஆளும் பா.ஜ.க. தாமதப்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.

    பாராளுமன்றத்தில் முத்தலாக் முறையை தடுக்க சட்டம் இயற்றிய அரசு, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ஏன் சட்டம் இயற்றவில்லை? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். 

    அயோத்தியில் ராமர் கோயிலை விரைவாக கட்ட வேண்டும் என வலியுறுத்தி உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோ நகரில் இருந்து அக்டோபர் மாதம் 21-ம் தேதி அயோத்தி நோக்கி நடைப்பயணம் செல்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். #ChaloAyodhya #praveenTogadia
    ×