search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "posting"

    • கிருஷ்ணகிரி உட்பட தமி ழகத்தின் 46 இன்ஸ்பெக்டர் களை டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் அமுதா நேற்று உத்தரவிட்டார்.
    • நாமக்கல் மாவட்டம் தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு இன்ஸ் பெக்டர் ராஜா, சேலம் மாவட்டம் சங்ககிரி உட் கோட்ட பிரிவு டி.எஸ்.பி ஆகவும் நியமிக்கப்பட் டுள்ளனர்.

    சேலம்:

    சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி உட்பட தமி ழகத்தின் 46 இன்ஸ்பெக்டர் களை டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் அமுதா நேற்று உத்தரவிட்டார்.

    அதைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் தலைவா சல் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், நீலகிரி மாவட்ட குற்றப்பி ரிவு டி.எஸ்.பி ஆகவும், சேலம் மாநகர ரவுடிகள் கண்காணிப்பு (ஓ.சி.ஐ.யூ) பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜா ரவி தங்கம், கிருஷ்ண கிரி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி ஆகவும், நாமக்கல் மாவட்டம் தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு இன்ஸ் பெக்டர் ராஜா, சேலம் மாவட்டம் சங்ககிரி உட் கோட்ட பிரிவு டி.எஸ்.பி ஆகவும் நியமிக்கப்பட்

    டுள்ளனர்.

    இவர்கள் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்கள். மேலும் தஞ்சாவூர் மாவட்டம், புதுக்கோட்டை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சேலம் மாந கரம் அன்னதானப்பட்டி சரக உதவி கமிஷனர் ஆகவும், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர் செல்வம், சேலம் மாநகரம் அம்மாபேட்டை சரக உதவி கமிஷனர் ஆகவும் நியமிக்கப்பட்டு விரைவில் பொறுப்பேற்க உள்ளார்கள். 

    • குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் பதவி ஏற்றனர்
    • விழாவிற்கு சங்க தலைவர் உத்தரகுமார் தலைமை வகித்தார்.
    பெரம்பலூர்:


    தமிழ்நாடு அரசு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்கு மாடி குடியிருப்போர் நலச் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கவுல்பாளையம் தமிழ்நாடு அரசு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வளாகத்தில் நடந்தது.தமிழ்நாடு அரசு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்கு மாடி குடியிருப்போர் நலச் சங்க தேர்தல் நடந்தது.இத்தேர்தலில் சங்க தலைவராக உத்திரக்குமார், செயலாளராக முருகேசன், பொருளாளராக ராஜன், துணைத் தலைவராக, செங்கமலை, துணை செயலாளராக முருகையா செயற்குழு உறுப்பினர்களாக அன்பு, கோபி என்கிற கோபாலகிருஷ்ணன், கண்ணன், ரவிச்சந்திரன், கலாவதி, ராதாகிருஷ்ணன், அசோகன், பிரியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு சங்க தலைவர் உத்தரகுமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பெரம்ம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் கலந்து கொண்டு சங்க பெயர் பலகையை திறந்து வைத்தார். புதிய பொறுப்பாளகளை பணியில் அமர்த்தி வாழ்த்தி பேசினார். இதில், கவுல்பாளையம் ஊராட்சி தலைவர் கலைச்செல்வன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


    ×